பக்கம் எண் :

46செந்தமிழ்க் காஞ்சி

2

2

 
   
   தகத்தக வெனத்தங்க மேனி தலையுந் தாங்குந் துவர்ஓர் வானி  
   தமிழுணர்ச்சி ததும்பும் மானி தருஞ்சொற் பொழிவு தவழும் ஆனி  
   
   காமுறு பண்குர லென்னத்  
      தாமரை கண்களை யுன்ன  
   மாமறை நுண்பொருள் துன்னத்  
      தாமுரை பண்பருள் ஒன்னத்

(தவத்)

11. தமிழ்ப்பெயர் தாங்கல்

'சாந்தமுலேகா' என்ற மெட்டு

ப.

 
   
  தமிழிலே பேரைத் தாங்ககில் லாரைத்  
  தமிழரெனவுந் தகுமோ  
   

து. ப.

 
   
   அமிழ்தினு மினியபூ வுமிழ்தரு தேனாம் (தமிழிலே)  
   

உ.1

 
   
   தாயை மறுதலிக்கை தாயிடத் தன்போ  
   தூய தமிழ்ப்பெயரின் தொடர்பின்மை பண்போ

(தமிழிலே)

   

2

 
   
   மொழிகளுக் கரசியாம் முதுதமிழ்ச் சொல்லை  
   இழிவெனக் கருதுகை இழிதக வெல்லை

(தமிழிலே)

   

3

 
   
   தன்பெயர் தமிழாகத் தாங்கியிரா விடமே  
   செந்தமிழை யுயர்த்திச் சிறப்பித்தல்என் மடமே

(தமிழிலே)

   

4

 
   
   பிறமொழிப் பேர்கொண்டாரின் பேர்இடம் தாங்கின்  
   பெயர்வதில்லா மல்தமிழ்ப் பெருமையே நீங்கும்

(தமிழிலே)