பக்கம் எண் :

48செந்தமிழ்க் காஞ்சி

13

13. பெரியார்

    பண் - ‘காப்பி‘                             தாளம் - முன்னை

ப.

 
   
   செயற்கரிய செய்தவர் பெரியார் - செம்பொற்  
   சிலைபெறும் புகழுக்கே சிறப்பாக வுரியார்  
   

து.ப.

 
   
   மயற்கை யொடுமடமை அரியார் - பல  
   மதகரி களுக்கே கோடரியார்

(செயற்)

   

உ. 1

 
   
   பையற் பருவத்துஞ் சாமி யென்று - வட  
   பார்ப்பனர் பாதத்தில் விழுந்து  
   கையிற் பொருள் காணிக்கையாத் தந்து - மிகக்  
   களிக்கும் வழக்கம்போம் விழுந்து

(செயற்)

   

2

 
   
   உண்டிச் சாலை யுள்ளறை யுண்டு - பின்னே  
   ஒழிந்த வேதியன் எச்சில் நன்று  
   உண்டுவந்தான் தமிழன் அன்று - அதை  
   ஒழித்தவர் பெரியாரே வென்று

(செயற்)

   

3

 
   
   சூத்திரன் தமிழனாய்ச் சொல்லி - அவன்  
   சொந்த நாட்டிலவனைத் தள்ளி  
   மேல்தொடுவது மின்றி யெள்ளி - றூவன்  
   மிதித்த நிலைக்கு வைத்தார் கொள்ளி

(செயற்)