பக்கம் எண் :

50செந்தமிழ்க் காஞ்சி

15

15. வாழ்க்கை யமைப்பு முரண்

    பண் - 'சிம்மேந்திர மத்திமம்'                 தாளம் - முன்னை

   சுரைக்குடுவை யமிழ அரைக்கும் அம்மி மிதக்க  
   வரைக்கரி நீத்து முயல்நிலை யேனோ  
   உரைக்கும் இச்சுனை தமிழ்நிலந் தானோ  
   துரைத்தனம் இதற்கொரு துணை யீனோ  
      சிறிது கற்றோர் பெருகி வாழ  
      பெரிது கற்றோர் சிறுகி வீழ

(சுரைக்)

16. மூவகையர் ஏமாற்றல்

    பண் - 'பியாகு'                            தாளம் - முன்னை

ப.

 
   
   ஏமாற்றல் ஏன் இன்னுமே - இவ்வண்ணமே  
   

உ. 1

 
   
   நாமேற்றும் ஆரியனும் நண்ணுந் திராவிடனும்  
   நம்மவனுந் தமிழன் தெம்மாடி யென்றே யின்னும்

(ஏமா)

   

2

 
   
   ஆரியம் தேவமொழி அதிலே வழிபாடென்று  
   பூரிய அயலாரே புன்சிறு பான்மை நின்று

(ஏமா)

   

3

 
   
   தமிழுக் கொன்றுஞ் செய்யாதும் தமிழ்த்தொண்டரைப் போற்றாதும்  
   தமிழை வளர்த்தோ மென்று தருக்கி யரசு கூறும்

(ஏமா)

   

4

 
   
   கலவை மொழியிற் கல்வி கற்பிக்குந் திட்டமொன்றைக்  
   குலவுந் தமிழே யென்று கொண்டாடுங் கட்சியின்றே

(ஏமா)

   

5

 
   
   திரைப்பட மொழியையே தீவிய தமிழென்று  
   உரைப்பிட மெல்லாஞ் சொல்லி உண்மை யறியாதாரை

(ஏமா)