பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 51

17

17. தமிழ்ப் பகைவர்

'வதனமோ சந்த்ர பிம்பமோ' என்ற மெட்டு

ப.

 
   
   இதுவொரு புதுமையானதே - இழிவு தருவதே  
   

து.ப.

 
   
   இத்தமிழகத் திருந்தயலார் இதனை யெதிர்ப்பதே

(இது)

   

உ. 1

 
   
   முத்தமிழ் மறைமலையடிகள் ஒத்த தமிழும் ஒருதமிழா  
   எத்தனையும தின்பமுண்டோ எனவினவுவதே

(இது)

   

2

 
   
   முந்து தொல்காப்பியத் தெழுத்தன்றும்  
   பிந்தியசோகன் கல்வெட்டி னின்றும்  
   வந்தென வுலகரங்கி லின்றும், வழிவிளம்புவதே

(இது)

   

3

 
   
   மாமறை மலையடிகள் நாட்டும்  
   சோம சுந்தர பாரதி கூற்றும்  
   பாரதி தாசன் பைந்தமிழ்ப் பாட்டும் பகரும் தீதென்பதே

(இது)

18. தமிழ் கெடவரும் வளர்ச்சித் திட்டம்
தீங்குவிளைப்பது

'தோடுடைய செவியன்' என்ற மெட்டு

   வாளைதவழ் வெள்ளங்களி வந்தயல் துள்ளியிளந் தெங்கின்
   பாளைமிசை வாளின்மிளிர் பண்ணைநீர்ப் பாசனங்கண் டாலும்
   காளையிவர் கண்ணுதல்முக் காலைதேர் கழகத்தமிழ் நைய
   நாளைவட இந்தியொடு நாகரி நலியின்ஒரு நன்றோ!