பக்கம் எண் :

52செந்தமிழ்க் காஞ்சி

2

2

 
   இரும்பும்இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்புநிலக் கரியும்
   பரும்பெனக்கு விந்துதொழிற் சாலைகள் பலவும்எழுந் தாலும்
   விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்ததமிழ் நைய
   உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறுசெயின் நன்றோ?
 

3

 
   கீழ்கரைநின் றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை
   மேல்கரைநேர் சேரவிணை யாகிப்பின் மின்னோட்டம்வந் தாலும்
   சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய
   மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின்ஒரு நன்றோ?
 

4

 
   பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டிதொட்டி யெல்லாம்
   நள்ளியெதுங் கட்டணமே யின்றிநல் கூர்ந்தாருங் கற்றாலும்
   வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்ததமிழ் நைய
   கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவிவரின் நன்றோ?
 

5

 
   முதியோரெலாம் இளமைவர மூப்புச்சம் பளமும் பெற்று வாழ்ந்து
   பதியாமலே இளைஞரெலாம் பாங்கான பதவிகள்பெற் றாலும்
   மதிசூடிமுன் மதுரையமர் மன்றஞ்சேர்ந் தாய்ந்ததமிழ் நைய
   புதிதாய்வரும் இந்தியொடு நாகரி புகுமேல்ஒரு நன்றோழூ
 

6

 
   நண்ணும்நடுப் பகல்மாணவர் நாட்டுள்ள பள்ளிகளி லெல்லாம்
   உண்ணும்படி அறுசுவைசேர் உண்டிகள் உதவியேவந் தாலும்
   பெண்ணியிடங் கொண்டான்முனம் பேணியே ஆய்ந்ததமிழ் நைய
   எண்ணிவரும் இந்தியொடு நாகரி இன்னல்செயின் நன்றோ?
 

7

 
   புத்தாடைபல் பொத்தகங்கள் பூந்துகிற் பொக்கணத்தி லிட்டுத்
   தத்தளிக்கும் மாணவரெல் லாருக்கும் தந்தையிற்றந் தாலும்
   பித்தனென்னும் பெம்மான்முனம் பீடுற ஆய்ந்ததமிழ் நைய
   எத்திவரும் இந்தியொடு நாகரி எய்தின்ஒரு நன்றோ?