பக்கம் எண் :

54செந்தமிழ்க் காஞ்சி

3

3

 
   
   வடமொழியின் கிளையே வண்டமிழ் என்று காட்டும்  
   மடவகர முதலிய மன்னும் இத்தமிழ் நாட்டும்

(தமிழனே)

   

4

 
   
   மறைமலை யடிகளை மறைத்தனர் முற்றும் இங்கே  
   மறையவர் கையிற் சேரின் மலர்வது தமிழ் எங்கே?

(தமிழனே)

   

5

 
   
   அரியணை மேல்தமிழை அமர்த்தினோம் என்றே சொல்லிப்  
   புரியணை மேலிருத்திப் பொருத்துவர் பின்னே கொள்ளி

(தமிழனே)

   

6

 
   
   இந்தியும் எந்தா யென்றே ஏற்றித் தொழுது நின்றார்  
   நந்தமிழ் அந்தோ சொந்த நாட்டிலும் வாழ ஒன்றார்

(தமிழனே)

   

7

 
   
   ஆரியன் தெய்வ மென்றே அடிமைத் தனத்தில் வாழ்ந்தான்  
   ஏரண உண்மை கண்டும் இழிந்த விலங்காய்த் தாழ்ந்தான்

(தமிழனே)

20. தமிழன் உடைமை தமிழ் ஒன்றே

'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற மெட்டு

1

 
   
   இருப்ப தெல்லாம் தமிழனுக்கே  
      இன்பத்தமிழ் ஒன்றே  
   இனியதையும் இழந்து விட்டால்  
      இங்கேவாழ் வில்லை  
   பொருத்தமுறும் தாய்க்கொலையும்  
      புரிகஎன் றுரைத்தால்  
   பொதுமதியால் அவ்வுரையின்  
      புன்மையறிந் திடுவீர்

(இருப்ப)