பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 63

32

32. பறம்புக்குடி

'குரும்பைநிகர் மென்முலையாள்' என்ற மெட்டு

1

 
   உலகத்தமிழ்க் கழகக்கிளை யுற்றபல மாவட்டங்கள்
   முலமுலெனக் கிளைகள் மொய்ந்த முதன்மையது முகவையாகும்
   பலகிளையும் பாங்கா மேனும் படைப்புமுறைத் தலைமை சொல்லின்
   தலைவன்தமிழ்க் குடிமகனே தங்கியதாம் பறம்புக்குடி.
 

2

 
   கழக முதலாட்டைச் சீர்நாள் காணரிய வள்ளுவர்தம்
   பொழுதுகழிந் தீராயிரம் புகலுமிந்த ஆண்டயர்வும்
   பழகுபரி மேலழகர் பளகறுக்கும் உரைவிழாவும்
   விழுமியவாய் நடக்குமாற்றால் விஞ்சியதாம் பறம்புக்குடி.

33. திரு. இரா. முத்துக்கிருட்டிணன்

'மண்டலம் புகழும் மாணிக்கமாய் விளங்கம்' என்ற மெட்டு

1

 
   
   மெத்தப் பெருந்தகை யொத்துப் பிறந்தவன் முத்துக் கிருட்டிணன்  

அன்றோ

 
   இற்றைக் கிருந்தமிழ்ப் பற்றிற் சிறந்தவோர் கொற்றத் திருமகன்  

ஒன்றோ

(மெத்தப்)

   

2

 
   
   கோப்பெருஞ் சோழனும் மாப்பிசி ராந்தையும் கோப்புமாறிப்  

பிறந்தன்றே

 
   யாப்புற வேயின்றிக் கேட்பினா லேயொன்றிக் காப்பவன்  

முன்வந்தானின்றே

(மெத்தப்)

   

3

 
   
   தென்னன் தமிழ்பேணும் மன்னன் ஒருவனும் சென்னையிலே  

யின்றே யில்லை

 
   தன்னந் தனிவள்ளல் அன்ன இவனின்றேல் என்னென்  

னவோபெருந் தொல்லை

(மெத்தப்)