பக்கம் எண் :

76செந்தமிழ்க் காஞ்சி

6ஆம

6ஆம் பாடம்

வண்ணாத்திப் பூச்சிப் பாட்டு

'யாரம்மா வண்டியிலே' என்ற மெட்டு
பூச்சியைக் காணுதல்

   1. வண்ணாத்திப் பூச்சியே!
     வர்ணமிட்ட பூச்சியே!
  கண்ணோக்க நேர்த்தியாம்
     காட்சியான பூச்சியே!
   
 

கவனித்தல்

   
   2. விசிறிபோல வீசுவாய்
     விரைந்தென் கையில் சேருவாய்
  விசிறவேண்டா நோகுமே
     வேடிக்கைநான் பார்க்கிறேன்.
   
 

பூச்சி தூரமாய்ப் போகுதல்

   
   3. அதிக தூரம் போய்மலர்
     அதிலே தேனைக் குடிப்பாயே
  மெதுவாய்ப் பின்னா லேவந்து
     மேவிக் கையில் பிடிக்கிறேன்.
   
 

பூச்சி உயரப் பறந்து போகுதல்

   
   4. மேலே மேலே போயினும்
     மிகுந்த வரையில் குதித்துநான்
  சீலை யாலே யுன்னையே
     சேர்த்துப் பிடிக்கி றேன்இதோ!