பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 77

New Page 1
 

கையில் பிடித்தல்

   
   5. உன்னைக் கையில் பிடிக்கவும்
     உதிர்ந்த பொடியும் ஒட்டுதே
  அன்னை வாச னைப்பொடி
     அன்பாய்ப் பூசி யிட்டாளோ?
   
 

வண்ணம் கண்டு மகிழ்தல்

   
   6. வண்ணாத்தி பலவித
     வண்ணச் சேலை தோய்த்தபின்
  தண்ணீரைப் பிழிந்துதான்
     தரையில் காயப் போடுவாள்.
   
   7. அதுபோலவுன் சிறகிலே
     அழகழகாய் நிறங்களாம்
  இதனாலேதான் பொருத்தமாய்
     இந்தப் பேரை இட்டதோ?
   
 

பூச்சி நோவால் காலாட்டுதல்

   
   8. அதிக மாய்உன் கால்களை
     ஆட்டு கின்றாய் நோகுதோ?
  வதை செய் யாமல் சிலநேரம்
     வைத்தி ருப்பேன் கையிலே.
   
 

பூச்சியின் சிறகு ஒடிதல்

   
   9. ஐயை யோநான் என்செய்வேன்
     அருமை யான சிறகொன்று
  பிய்ந்து போன தேவிட்டுப்
     பிரிந்து விட்டேன் இப்போதே.
   
 

மனம் பதைத்தல்

   
   10. பதைக் குதேஎன் உள்ளமும்
     பாவம் பூச்சி களைஇனி
  வதைக்க மாட்டேன் அன்னையும்
     வந்தால் சொல்வேன் உண்மையே