'என்னருமைக்
குஞ்சுகளாம்' என்ற மெட்டு.
1. |
தோட்டத்திலே
பூப்பறிக்க |
|
கூட்டமாக
வாரும் |
|
பாட்டுப்
பாடிப் பலமலரைக் |
|
கூட்டிக்
கூட்டிச் சேரும். |
|
|
2. |
மல்லிகையும்
மருக்கொழுந்தும் |
|
வாசமான
ரோஜா |
|
நல்ல நல்ல
மருகுடனே |
|
நலமாகப்
பறிப்போம். |
|
|
3. |
கிண்ணம்போல
வண்ணமாகக் |
|
கிளையிலுள்ள பூவை |
|
கண்ணிகண்ணி
யாகக்கட்டி |
|
கழுத்திலேநாம்
அணிவோம். |
|
|
4. |
ஊதுகிற குழல்போல |
|
உள்ள
நல்ல பூவை |
|
ஊதியதன்
உள்ளிருந்தே |
|
ஒழுகும்
தேனைக் குடிப்போம் |
|
|
5. |
வானத்து
நக்ஷத்திர |
|
வகைபோன்ற
பூவை |
|
ஏனத்தில்
பறித்திடுப்பில் |
|
இடுக்குவோமே
வாரும். |
|
|
6. |
அடுக்குமல்லி
சாமந்தி |
|
அலரிஇவை
எல்லாம் |
|
தொடுத்துடனே
மாலையாகத் |
|
தொங்கவிட்டுப்
பார்ப்போம். |
|
|
7. |
கம்மல்
போன்ற பூக்களைநாம் |
|
கனமாகப்
பறித்து |
|
பொம்மை
காதில் ஒட்டிஒட்டிப் |
|
போட்டழகு
பார்ப்போம். |
|
|
8. |
கூட்டிச் சேர்த்த
பூவை எல்லாம் |
|
கூடையிலே
கொட்டி |
|
வீட்டுக்குப்போய்
அன்னையார்க்குக் |
|
காட்டுவோமே
வாரும். |