பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 79

8ஆம

8ஆம் பாடம்

மண்ணாங் கட்டிவிருந்து

'என்னருமைக் குஞ்சுகளாம்' என்ற மெட்டு.

   1. மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு
     மண்ணாங்கட்டிப் பெண்ணே
  மண்ணாங்கட்டிச் சாப்பாட்டுக்கு
     மண்ணாங்கட்டித் தண்ணீர்
   
   2. ஓடெடுத்துக் கல்லடுப்பில்
  உலையேற்றிக் கீழே
  சூடெடுக்கத் தட்டித் தட்டிச்
  சுக்காங்கல்லை வைத்து
   
   3. அடுப்பூதி அடிக்கடியே
     அம்மா! சோளத் தட்டைத்
  துடுப்பாலே உலைகிண்டித்
     தூசி உப்பைத் தூவி
   
   4. சோறாக்கி இப்படியே
     சுகமான குழம்பும்
  வேறாக்கிக் கலியாண
     விருந்திடுவோம் வாரும்
   
   5. எல்லாரும் சாப்பிட்டே
     இருந்த மீதிச் சோற்றில்
  தண்ணீரை ஊற்றி இந்தத்
     தனிஅறையில் வைப்போம்.