தாரணி
யிலுயர் தமிழ்நாடு திருத் தாண்ட வம்புரி கற்பகக் காடு |
ஆரண
முனிவர் மலைக்கோடு அதை அடைந்த வர்க்கும் பேரின்ப வீடு |
|
2 |
|
பொன்னும் மணியும் விளையும் நாடு ஞானப் பொற்புடன் சாலமோன் புகழ்நாடு |
கன்னலொடு
செந்நெல் வளர்நாடு பல கற்ப காலமாய் விளங்கும் நாடு |
|
3 |
|
காவிய மிகுந்த கலைநாடு பண்டே கடல் வாணிகம் புரிந்த நாடு |
ஓவிய
மிகுந்த திருநாடு மிக உன்னத கோபுர முள்ள நாடு. |
|
4 |
|
நாகரிகமே
மிகுந்த நாடு மிக நடுநிலை யான தமிழ்நாடு |
ஏகமனமா யிருந்த நாடு மிக ஏதிலரை ஆதரித்த நாடு |
|
5 |
|
வள்ளுவன்
பிறந்த திருநாடு பெரு வள்ளல்கள் திகழ்ந்த பெருநாடு |
மள்ளர் நடுகல்லி லுள்ளநாடு ஒரு மாத மூன்றுமழை பெய்தநாடு |
|
6 |
|
கம்பனும்
பிறந்த தமிழ்நாடு கடுங் காள மேகமும் பிறந்தநாடு |
நம்ப
னடியார்க்கு விளையாடித் திரு நடனமைந்து மன்று புரிநாடு |