பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 81

10ஆம

10ஆம் பாடம்

குழந்தையைக் குளிப்பாட்டல்

இது தாய் சொல்வது குறிப்பிட்ட மெட்டு இல்லை.

   1. குழந்தையே வாஇங்கே - உன்னைக்
  குளிப்பாட்டப் போகிறேனே
   
   2. அழுகாதே அழுகாதே - உன்னை
  அடித்திடுவேன் பார்இப்போ
   
   3. கைகாலை ஆட்டாதே - உன்
  ஐயாவைக் கூப்பிடுவேன்
   
   4. குளிராது குளிராது - நீ
  கொஞ்சநேரம் பொறுத்துக்கொள்ளேன்
   
   5. முதுகைக் குனிஇப்போ - நான்
  மெதுவாகத் தேய்க்கிறேன் பார்
   
   6. சோப்புப் போட்டு உடம்பை - நான்
  சுகமாகத் தேய்க்கிறேனே
   
   7. கண்ணே கண்ணை மூடு - உன்
  கண்ணெல்லாம் காந்திவிடும்
   
   8. இன்னும் தலைமேலே - நான்
  இரண்டு செம்பு ஊற்றுகிறேன்
   
   9. இப்போ எழுந்துவாடா - உன்
  ஈரத்தை துடைக்கவேணும்
   
   10. வெளுத்த கமுசுடுத்து - உனக்கு
  வெகுநேர்த்தி யாயிருக்கும்.