சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை இடை உரி என நான்காக வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள், முதல் மூன்றே உண்மையில் சொல்வகையாகும், இறுதியது செய்யுள் வழக்குப் பற்றியதே. உரிச்சொல் (Poetic Idiom) உரிச்சொல் செய்யுள் வழக்குப்பற்றியதேயென்பதற்குக் காரணங்களும் சான்றுகளும் : (1) சொற்கள் மூவகைக்கு மேற்படாமை. பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் அவ் விரண்டையும் சார்ந்து வரும் இடைச்சொல்லுமென மூவகையே சொற்கள். எச்சவினை காலங்காட்டின் தெரிநிலையும், காட்டாவிடின் குறிப்புமாகும். ஆங்கிலத்திலுள்ள எண்வகைச் சொற்களையும், i. Nouns - பெயர்ச்சொல் ii. Verbs - வினைச்சொல் iii. Particles - இடைச்சொல் என மூன்றாகவே அடக்குவர் கென்னெடி (Kennedy) என்பார்.1 அரபியிலும் அதைப் பின்பற்றும் உருதுவிலும், பெயர் வினை இடை என மூன்று சொல்வகையே கூறப்படுகின்றன. (2) | ”உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை.... பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்” | (உரி. 1) |
என்று தொல்காப்பியர் உரிச்சொல்லிலக்கணங் கூறல். (3) தொல்காப்பியர் ஏனை மூன்று சொற்கட்கும் இலக்கணங் கூறியதுபோல, உரிச்சொற்கோர் இலக்கணம் கூறாமையுங் அகராதி முறையில் பொருளே கூறிச் செல்லுதலும்,
1. The Revised Latin Primer, pp. 12, 13
|