(4) | உ : | வினைவேரே உரிச்சொல் என்பது. | ம : | வினைவேர் (தாது) ஏவலாகவும் பகுதியா கவும் வினையியலிற் கூறப்பட்டுள்ளது. வினைவேரை வேறாகக் கூறின், இடை வேரையும் வேறாகக் கூறவேண்டும். குரு மாலை முதலிய பெயர்ச்சொற்களும் செல்லல் அலமரல் முதலிய வினைச் சொற்களும் ஏ ஐ முதலிய இடைச்சொற் களுமாக, உரிச்சொல் மூவகைப்படுதலா னும், அவற்றுள் வினைச்சொல் பகுதியும் தொழிற்பெயருமாக இரு வேறு வடிவிற் கூறப்படுதலானும், உரிச்சொல்லை ஒரு தனிச்சொல் வகையென்றும், வினைவே ரென்றும் கூறுதல் தவறே என்பது. | (5) | உ : | “உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி” உரிச்சொல் என்பது. | (குற்றி. 77) | ம : | இதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ள விண்ண விணைத்தது, வெள்ள விளர்த்தது முதலிய காட்டுகளில், நிலைமொழிகள் இடைச்சொல்லாயும் வருமொழிகள் வினைச்சொல்லாயு மிருத்தலின், இவ்வுரை போலியுரை யென்பது. |
பிறர் மறுப்புக்கு மறுப்பு உரிச்சொல் செய்யுட்சொல்லேயென்று, முன்னமே நான் செந்தமிழ்ச் செல்வியில் ஒரு கட்டுரை வரைந் திருக்கின்றேன். அதன் உண்மையை உணராத சிலர், பலவாறு மறுப்புக் கூறியிருக்கின்றனர். அம் மறுப்பும் அதன் மறுப்புமாவன: (1) ம : | “வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன” | (உரி. 2) |
என்று தொல்காப்பியர் வெளிப்படுசொல்லும் உரிச்சொல்லுள் அடங்கக் கூறியிருப்பதால், உரிச்சொல் செய்யுட் சொல்லன் றென்பது.
|