பக்கம் எண் :

164ஒப்பியன் மொழிநூல்

வடமொழி உலக முதன்மொழியாக முடியாமை

மொழிகளின் இயல்பையறியாத பலர், வடமொழி உலக முதன்மொழி யாயிருக்கலாமென்று கருதுகின்றனர்.

உலகில் முதலாவது தோன்றிய திருந்திய மொழி தமிழே. குமரிநாட்டில் தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்த போது பிரிந்த மக்கள், ஆப்பிரிக்கா, தென்கண்டம், அமெரிக்கா முதலிய இடங்கட்கும், அசைநிலையிற் பிரிந்த மக்கள் கடாரம் சீனம் வட ஆசியா ஐரோப்பா முதலிய இடங்கட்கும்சென்றதாகத் தெரிகின்றது. அசைநிலையிற் பிரிந்த மக்களின் மொழிகளே, துரேனியம் அல்லது சித்தியம் என்று கூறப்படும் குடும்பத்தவை.

பால்டிக் கடற்பாங்கரில், துரேனியத்தின் திரிபாகவே ஆரியம் தோன்றியிருக்கின்றது. பால்டிக்கின் வடபாகங்களில் பின்னியம் (Finnish) என்னும் துரேனிய மொழி வழங்கு வதும், சுவீடியம் (Swedish) டேனியம் (Danish) முதலிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் இருப்பதும், ஜெர்மானியத்திலுள்ள சில சொற்கள் ஆரிய இலக்கிய மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு மூலமாயும் தமிழுக்கு நெருக்கமாயுமிருப்பதும், ஆட்டோ சிரேதர் கூறியிருப்பதும் இக் கொள்கைக்குச் சான்றுகளாம்.

ஆரியஞ்சென்ற தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு மூவகைய:

(1) ஆரியரின் முன்னோர் குமரிநாட்டினின்று பிரிந்து போனபோதே உடன்சென்றவை.

கா :

தமிழ் வடஇந்தியம் மேலையாரியம் கீழையாரியம்
நான் மைன் me --
நாம்ஹம் wir, we vayam
நூன் தூ du, tu tvam
நூம் தும் ye, you yuyam
இருத்தி -- eart, es asi

(2) ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் இடைக்காலத்திற் சென்றவை, அல்லது நேரே மேலையாரியஞ் சென்றவை.