பக்கம் எண் :

தமிழ்மொழித் தோற்றம் 97

வாழை - வாழ்.

வாழை நீர்வள நிலத்தில் வளர்வதையும், ஒரு குடும்பம் போல மரமும் பக்கக்கன்றுகளுமா யிருப்பதையும், பெற்றோர் தள்ளாடினபின் பிள்ளைகள் தலையெடுப்பது போலத் தாய்வாழை முதிர்ந்தபின் பக்கக் கன்றுகள் ஓங்குவதையும், இங்ஙனம் தொடர்ந்து நிகழ்வதையும் நோக்குக.

“வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம்” என்றார் இராமலிங்க அடிகள்.

வாழை முதிர்ந்தபின் சாயும்.

சாய் - சா = இற. ஒ.நோ: Ice. deyja; Dan. do; Scot. dee. E. die.

சகர டகரங்கட்கு ஓர் இயைபிருப்பதனாலேயே, ஒடி - ஒசி, vide - vise என்று திரிகின்றன.

சா + வி = சாவி (சப், வ.). சாவி + அம் = சாவம் (சாப, வ.) - சாபம்.

சாவிக்கிறான் என்பது இன்றும் உலக வழக்கு.

வாழ்வி x சாவி. வாழ்த்து - வழுத்து. வாழ்த்தல் சொல்லளவே.

சினை

வேர் : வேரூன்று, வேர்கொள், வேரறு.

முளை : கான்முளை; முளை = தோன்று (வி.), இளமை, துவக்கம் (பெ.).

தண்டு : தண்டு = தடி, படை (பெ.); தண்டல் = வரி திரட்டல். தண்டம் = தடி, படை, தண்டனை, தண்டனைக் கட்டணம், வீண்.
தண்டி = பெரு, ஒறு (வி.).
தடி = கம்பு, திரட்சி, ஊன் (பெ.); பெரு, வெட்டு (வி.). தடியாலடித்ததே முதல் தண்டனை.

கவை : கவை = பிரி (வி.). கவடு = காலிடை. கவை - கவான் - கமா (உருது).