பக்கம் எண் :

164நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சந்தனம் பூசு.
சோறு உண்.
தாள் அடி.
பாடல் இயற்று.
தென்றல் வீசும்.
விறகு பிள.
நூல் எழுது.
விடை எழுது.
படம் வரை.
அம்பு எய்.

துணைவினைகளைப் பயன்படுத்தும் முறை

துணைவினை என்பது வினைச் சொல்லோடு துணயாக வருவது.
இத் துணைவினைகளைப் பயன்படுத்துவதிலும் வேறுபாடு உண்டு. கீழே
காண்க :

அருள் - உயர்வு குறித்து வரும்.

காத்தருள்.

இடு - உறுதிப்பாட்டைக் குறிக்கும்.

வேலை முடித்திட்டான்.

இரு - நிலைமையைக் குறிக்கும்

நான் போன போது அவன் படுத்திருந்தான்.

ஒழி - முழுவதும் இல்லாமையைக் குறிக்கும்.

அவன் கெட்டொழிந்தான்.

கொடு, தா. - பிறருக்குச் செய்வதைக் குறிக்கும்.

அவனுக்கு வட்டி முழுதும் தள்ளிக் கொடுத்தான்.

அவனே தன் மகனுக்குப் பாடம் சொல்லித் தந்தான்.

கொள் - தனக்காகச் செய்வதைக் குறிக்கும்.

அவனே சோறு சமைத்துக் கொள்கிறான்.

போ - ஊற்றமின்மையைக் குறிக்கும்.

அவன் யாதேனும் சொல்லிப் போகிறான்.

வா - வழக்கத்தைக் குறிக்கும்.

நான் படுக்கை விட்டெழுந்ததும் மூன்று திருக்குறளை நாள்தோறும்
படித்து மனப்பாடம் செய்து வருகிறேன்.