பக்கம் எண் :

பயன்படுத்தும் பாங்கு 167

அறிஞர் -

அறிவில் சிறந்தவர்.

புலவர் - புலமையுடையவர்.
மேதை - பேரறிஞர்.
--------------------------------------------
பேச்சாளர் - மேடைப் பேச்சில் வல்லவர்.
நாவலர் - பெரும் பேச்சாளர் (Orator)
-----------------------------------------------
பாவலர் - பாக்களை இயற்றுபவர்.
கவிஞர் - கவி இயற்றுவதில் கருவிலே அமைந்த
திருவுடையார் (Poet).
-------------------------------------------
குற்றுதல் - (நெல்) குற்றுதல்.
குத்துதல் - (கையால் உடம்பில்) குத்துதல்.
கொத்துதல் - (கோழி) கொத்தித் தின்னல்.
----------------------------------------
கீர்த்தி - புகழ்.
சீர்த்தி - பெரும்புகழ்.
ஒளி - உயிருள்ளபோது இருக்கும் கீர்த்தி.
புகழ் - இறந்தபின்பு ஏற்படுவது. (உண்ணான் ஒளி நிறான்
ஓங்கு புகழ் செய்யான் - நாலடியார் - (செல்வ
நிலையாமை - செய்யுள் - 9)
------------------------------------------------
கடவுள் - முழுமுதற் செழும்பொருள், இறைவன்.
கடவுளர் - சிறு தெய்வங்கள்.
தெய்வங்கள் - அச்சத்தால் வணங்கப்படுபவை.
தேவதைகள் - கடல்தேவதை, வனதேவதை போன்ற பெண்
தெய்வங்கள்.
தேவர்கள் - சுவர்க்கத்தில் இருந்து பின்பு மண்ணுலகத்தில்
பிறந்து அதன் பின்பு முத்தியுலகை
அடையக்கூடியவர்கள்.
-----------------------------------------