|
விறலி - |
மனத்தினுள் இருக்கின்ற கருத்தின் சுவையைக் கை,
கால்கள் முதலிய வற்றால் தோன்றுமாறு விறல்பட
நடனம் செய்பவள். |
|
அழகு - |
அளவு, உடற்கட்டு, நிறம் முதலிய வற்றால்
கண்ணுக்கு அல்லது மனத்துக்கு இனிதாகத்
தோன்றும் தன்மை. |
|
எழில் - |
எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத்
தோன்றும் அழகு. |
|
தோற்றம் - |
உடல், உள்ளம், உயிர், பண்பு, அனுபவம் சேர்ந்து
காட்சியளிக்கும் தன்மை. |
| ----------------------------------------------- |
|
மேகம் - |
முகில் |
|
கார்மேகம் - |
கரிய நீர் கொண்ட முகில் |
| ----------------------------------------------- |
|
தூவானம் - |
காற்றினால் சிதறப்படும் மழைத் திவலை. |
|
தூறல் - |
சிறுதுளி மழை. |
|
சாரல் - |
தூறல். |
|
மழை - |
பெருந்துளியாகப் பெய்வது. |
|
சோனாமாரி - |
விடா மழை. |
| ------------------------------------------- |
|
சினம் - |
கோபத்தின் பின் சிறிது பொழுது நிற்பது. |
|
சீற்றம் - |
கோபம் (சீறுவது). |
|
செற்றம் - |
நெடுங்காலம் இருக்கும் பகைமை. |
| ------------------------------------------- |
|
அழுதல் - |
வருத்தத்தால் கண்ணீர் விடுதல். |
|
புலம்பல் - |
தனிமையால் சிறிது வாய்விட்டு அழுதல். |
|
அரற்றுதல் - |
வாய்விட்டு அழுதல், பலவும் சொல்லித் தன் குறை
கூறி அழுதல். |
|
கதறுதல் - |
உணர்ச்சியால் வாய்விட்டு உரக்கக் கூறி அழுதல். |
| ------------------------------------------ |