பக்கம் எண் :

சொற்றொடர்ப் பிரிப்புத் தவறுகள் 277

வந்து விட்டன்
மிகுதியாகும் ஆனால்
பலாச்செடி
வெந் நீர்
கட்டளை இட்டான்
சிந்தித்து மாய்ந்து கொண்டும்
திரு நீலகண்டர்
வந்துவிட்டான்
மிகுதியாகுமானால்
பலாச்செடி
வெந்நீர்
கட்டளையிட்டான்
சிந்தித்தும் ஆய்ந்து கொண்டும்
திருநீலகண்டர்

‘திரு நீலகண்டர்’ என்னும் சொற்றொடரை இடம் விட்டுப்
பிரித்தெழுதினால் ‘திருவாளர் நீலகண்டர்’ என்றாகிவிடும். ‘ஜலந்தன்
குளிர்ச்சியை மாற்றினும் மாற்றும்’. இங்கே, ‘ஜலம் தன்’
என்றிருந்தால்தான் பொருள் விளக்கமாகத் தெரியும். ‘அவ்’ என்பது
பலவின்பாற் சுட்டாதலால் அவ்+ஊர் என்று பிரித்தலாகாது. அ+ஊர்
என்றே பிரிக்க வேண்டும். அ+ஊர் - வ் இரட்டித்து அவ்வூர்
என்றாகும் என்பதறிக.

சொற்களை எழுதும்போது தவறாகச் சிலர் பிரித்தெழுதுவர்.
ஆங்கிலத்தில் சொற்களைப் பிரிக்கும்போது இடமில்லாத காரணத்தால்
அவை அசையாகப் பிரித்து இணைத்துக்காட்ட - இவ்விதமாகச் சிறு
கோடிடக் காண்கிறோம். ஆங்கிலத்தில் சொற்களை இடமுட்டுப்
பாட்டால் பிரிக்கும் போது ஆங்கில அகராதியிற் குறிப்பிட்டவாறு
தவறு நேராத முறையில் பலர் பிரித்தெழுதுகின்றனர்; அச்சிடுகின்றனர்.
ஆனால், தமிழில் பலர் சொற்களைத் தவறாகப் பிரிக்கின்றனர்.
மொழியறிவுமிக்கவர்கள் ஆங்கிலத்தை எழுதுவதனால் அதில்
தவறுகள் நேர்வதில்லை. தமிழில் அப்படி இல்லாமையே இத்தகைய
தவறுகளுக்குக் காரணமாகிறது. சொற்றொடர்களைப் பிரிப்பதிலும்
தவறு வரக்கூடாது.