பக்கம் எண் :

50நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

ல - இதுவும் சொல்லுக்கு முதலில் பிறமொழிச்
சொற்களில் வருவதைக் கொள்ளலாம். லங்காஷயரை
இலங்காஷயர் என்றுஎழுதினால் இலங்கைக்கும்
இலங்காஷயருக்கும் மயக்கம் ஏற்படும்.லூக்கா என்னுஞ்
சொல்லை உலூக்கா என்று எழுதினால். நன்றாயிராது.
லூயிபிஷர் என்னும் பெயரை உலூயிபிஷர் என்று
எழுதுவது கூடாது.லட்டு என்பதை இலட்டு என்று
எழுதுவது நன்றன்று.
வ - வருகை, வாடல், விளைவு, வீணை, வெல்,
வேலை,வையகம், வௌவுதல்.

வகர வரிசையில் வு, வூ, வொ, வோ, என்னும்
எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வாரா.

ழ - சொல்லுக்கு முதலில் வாராது.
ள - சொல்லுக்கு முதலில் வாராது.
ற - சொல்லுக்கு முதலில் வாராது.
ன - சொல்லுக்கு முதலில் வாராது.

யகர வரிசையில் யி, யீ, யெ, யே, யை, யொ என்னும் 6
எழுத்துக்களும் சொல்லுக்கு முதலில் வாரா என்பதறிக.

யிலை, யீது, யொன்று என்று எழுதுவது தவறு, இலை, ஈது ஒன்று
என்று எழுதுக.

வகர வரிசையிலும் வு, வூ, வொ, வோ ஆகிய 4 எழுத்துகளும்
சொல்லுக்கு முதலில் வாரா என்பதறிக.

வுடு, வூடு, வொன்று என்று எழுதுவது பிழையாகும். விடு, வீடு
ஒன்று என்று எழுதுக.

றா முதலில் வாராது. றாமசாமி என்று எழுதுவது தவறு இராமசாமி
என்று எழுதுக.