வேளாளருள் ஒரு சாராரானவெள்ளாளர் சூத்திர வகுப்புள் அடக்கப்பட்டது,நாலாம் வகுப்பென்னும் வரிசை பற்றியே. தொழில்பற்றிக் குலங்கள் ஏற்கெனவேஏற்பட்டிருந்தன வேனும், அவற்றையெல்லாம்நால்வகைப் பிறவி வகுப்புகளாக வகுத்தவர்பிராமணர். அதனையே, "முற்படைப் பதனில்வே றாகிய முறைமைபோல் நால்வகைச் சாதியிந் நாட்டில்நீர் நாட்டினீர்" | |
என்று, குலவிளக்க அகவல் பாடிய கபிலர்கூறினார். பிராமணர் கல்விக் களத்தைத் தமக்கேயுரியதாகக் கூறியதனால், கல்வித்துறையில் முன்புதமிழர்க்கு வழங்கிய பார்ப்பார், அந்தணர், ஐயர்என்னும் பெயர்களுள் முன்னது முற்றும், பின்னவைஓரளவும், பிராமணர்க்கு வரையறுக்கப்பட்டு விட்டன."அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்" என்றுதொல்காப்பியரும், "பற்பலர் நாட்டிலும்பார்ப்பா ரிலையால்" என்று அகவற் கபிலரும்,குறித்தது ஆரியப் பார்ப்பனரான பிராமணரையே. ஐயன் என்னும் பெயர் ஐ = 1. வியப்பு. | "ஐவியப் பாகும்." | (தொல்.868) |
2. வியக்கத்தக்க பெரியோன், அரசன்,தலைவன். "என்னைமுன் நில்லன்மின்"(குறள்.771). 3. குடும்பத் தலைவனான தந்தை. "தன்னைசேவடித் தாமரை" (சீகாளத். பு. நான்முக.124) 4.மணமான பெண்ணின் தலைவனான கணவன். "என்னைக்குமுதவாது." (குறுந்.27) ஐ - ஆய் = அன்னை. ஐ - ஐது = வியப்பானது. | "ஐதே யம்ம" | (தொல். சொல்.358, உரை) |
ஐ - ஐயன் = 1. பெரியோன் 2. ஐங்குரவர்என்னும் ஐந்து பெரியோரின் பொதுப்பெயர். தாய்,தந்தை, அண்ணன், அரசன், ஆசிரியன் என்னும் ஐவரும்ஐம்பெரியோர். தாயைக் குறிக்கும்போது ஐயை என்றுஈறு திரியும். தம் ஐயன் தமையன் (அண்ணன்)."தந்தைக்குப் பின் தமையன்." 3. பெரியோனானமுனிவன். "ஐயர் யாத்தனர் கரணம் என்ப."(தொல். 1091). பிங்கல நிகண்டின் முனிவர் பகுதி"ஐயர் வகை" என்று பெயர் பெற்றிருத்தல்காண்க. எல்லார்க்கும் எல்லாவற்றிற்கும்தலைவனான இறைவன். 5. சாத்தன் என்னும் தெய்வம்.ஐயன் - ஐயனார். 6. தலைவன். ஐயன் என்னும் சொல் பறையரும், ஐயாஎன்னும் விளிவடிவம் பாண்டிநாட்டு வெள்ளாளர்முதலியார் முதலிய பல குலத்தாரும், தந்தையைக்குறிக்க ஆளும் சொல்லாகும்.
|