பிரிவு-மேல்நாடு சிறு குடிநாடு முதலிய பத்து அகமண நாடுகள் (மதுரை), பதினால் நாடுகள் (சிவகங்கை). வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன நாட்டின் புறமண உட்பிரிவுகள். தலைவன் பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான், இராசாளி குலப் பட்டம்-நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன் முதலியன. பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் 'கள்ளர் சரித்திரம்' (348) பட்டங்களைக் குறித்துள்ளது. பழமொழி தாழ்த்திக் கூறினும், கள்ளர் மறவர்க்கு எட்டுணையுந் தாழ்ந்தவ ரல்லர். காராளன் காராளர் உழுதுண்ணும் வேளாளர். சேலம் சேர்வராயன் (சேரவரையன்)மலையாளிகளுள் ஒருசாரர் தம்மைக் காராளர்என்பர். "காராள ரேர்கள் கடவோசை" | (அரிச்.பு.மயா.25) |
குசவன் தொழில் - மட்கலம் வனைதல். பட்டம் - வேளான், செட்டி, உடையார்,பிள்ளை. குடிமகன் தொழில்-பெரும்பான்மை மயிர்சிரைத்தலும் வெட்டுதலும், சிறுபான்மை மருத்துவமும்அறுவையும் (Surgery). "ஆரார் தலைவணங்கார் ஆரார்தாங் கையெடார் ஆரார்தாஞ் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும் தென்புலியூர் மேவுஞ் சிவனருள்சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலே தான்." | (கம்பர்) |
பிரிவு - தீண்டுவான், தீண்டான். பட்டம் - பண்டிதன். குலப்பிள்ளை(சாதிப்பிள்ளை) தொழில் - இரப்பு. குலம் | இரப்போன் | பள்ளி | நோக்கன் | கொங்குவெள்ளாளன் | முடவாண்டி |
|