பக்கம் எண் :

110தமிழர் வரலாறு-2

கோலன் - கோளன். குழல்-கோல்.கையிற் செங்குந்தம் பிடித்திருந்த போர்ப்படையினர் வழிவந்தவர் செங்குந்தர்.

தொழில் - நெசவு.

பிரிவு (சிலவிடங்களில்) - சோழியன்,இறாட்டு, சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம்,சேவகவிருத்தி.

நாட்டுப்பிரிவு-72 நாடு.

வழக்கம் - ஒவ்வொரு குடும்பமும் ஒருபெண்ணைக் கோவிலுக்குத் தேவ கணிகையாக விடுதலும்,அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும்.இவ் வழக்கம் நின்றுவிட்டது.

தலைவன் பட்டம் - பெரியதனக்காரன்,பட்டக்காரன், புள்ளிக்காரன்,

குலப்பட்டம் - அடவியார், நயினார்,முதலியார், மூப்பர்.

கொல்லன்

வகையும் தொழிலும் - ஐங்கொல்லர்(ஐங்கம்மாளர்).

மரக்கொல்லன் - தச்சன்.

கற்கொல்லன் - கற்றச்சன்,கம்மியன்.

பொற்கொல்லன் - தட்டான்,கம்மாளன்.

செப்புக் கொல்லன் - கன்னான்.

இருப்புக் கொல்லன் - கருமான்(கருமகன்), கொல்லன்.

முதன் முதல் தோன்றியவன்மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன்தொழில் கொல் எனப்பட்டது."மரங்கொஃறச்சரும்" என்று சிலப்பதிகாரம்(5 : 23) கூறுதல் காண்க. முதற்காலமாகியகற்காலத்தில், மரத்தினாலுங் கல்லாலுமே வீடுகட்டப்பட்டது. அதன் பின்னரே பொன்னும் செம்பும்உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்கலக்கன்னாரும் செப்புக் கன்னாருள் அடங்குவர்.

நாட்டுப்பிரிவு - பாண்டியம், சோழியம், கொங்கம் என்னும் மூன்று அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).

குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.