பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2115

பிரிவு - சின்ன வூழியம் பெரிய வூழியம்என்னும் ஈரகமணப் பிரிவுகள்.

பட்டம் - மணியக்காரன்,சேர்வைக்காரன், ஊழியக்காரன்.

பள்ளன்

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின்தென்பாகம்.

தொழில் - பயிர்த்தொழிலும் பண்ணைவேலையும்.

பிரிவு - அம்மாப் பள்ளன், அஞ்ஞாப்பள்ளன், ஆத்தாப்பள்ளன், பணிக்கன், கடையன்முதலிய பல அகமணப் பிரிவுகள்.

"நெல்வகையை எண்ணினாலும்பள்வகையை எண்ண முடியாது (உயர்வு நவிற்சி)".

தலைவன் பட்டம் - குடும்பன்,நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன், நாட்டுமூப்பன்.

குலப்பட்டம் - குடும்பன், பண்ணாடி(பண்ணையாடி), மன்றாடி, மூப்பன்.

பள்ளி (வன்னியன்)

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின்வடபாகம். பெயர் - பள்ளி, வன்னியன், செம்பியன்.

தொழில் - பயிர்த்தொழில்,வாணிகம், கொல்லற்று (கொத்த) வேலை, பண்டைநாளிற் சிலர் படை மறவர்.

பிரிவு - அரசு, பந்தல்முட்டி, அஞ்சுநாள்,கோவிலர், ஓலை முதலிய பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - கவுண்டன்,பட்டக்காரன், கண்டர், சம்புவராயன், நாயகர்,நயினார் முதலியன.

குலப் பட்டம் - கவுண்டன், படையாட்சி,நாய்க்கன், பிள்ளை, இராயன் முதலியன.

வன்னி என்பது ஒரு மரவகையைக்குறிப்பின் தென்சொல்; நெருப்பைக் குறிப்பின்வஃனி (vahni) என்னும்வடசொல்.

கதிரவன் திங்கள் நெருப்பு என்னும்முச்சுடரும், முறையே, சோழன் பாண்டியன் சேரன் ஆகியமூவேந்தர் குலத்திற்கும் முதலாகக்கொள்ளப்பட்டன. பண்டைத் தமிழகம் முழுதும்மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தது.அவருக்கடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்தாண்டனர். வன்னியைக் காவல் மரமாகக்கொண்ட குறுநிலமன்னர், உடையார்பாளையம்வேளைப்போற் சோழ