பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2133

திருத்தந்தையும்அருட்கடலுமான இறைவன் உருவிற்கு, தமிழர் தாமே தம்நெஞ்சார்ந்த அன்பு கனிந்த வணக்கத்தைத் தம்தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து,பேரின்பப் பெருமகிழ்ச்சி பெற முடியாவாறு,மேனாட்டினின்று வந்த பிராமணன் இடைநின்று,படைப்புத் தேங்காயை வாங்கி யுடைத்து,தமிழர்க்குத் தெரியாத, தனக்குந் தெளிவாகவிளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட்டதைச்சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்திலும் (Bank)வரியகத்திலும் பணங் கட்டியவர் திரும்புவதுபோல்வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை கேடானதீவினை!

உயிரிழப்பு: சிறந்த சிவனடியாராகஒழுகிய குற்றத்தினால், நந்தனார் என்னுந் தூயர்,பட்டப் பகலிற் பலர் காணச் சுட்டெரிக்கப்பட்டார். இத்தகைய கொடிய நிலைமையும் 1940ஆம்ஆண்டுவரை தென்னாட்டி லிருந்துவந்தது.

(6) பொருளாட்சித் துறை

பொது விழப்பு:பிராமணர், மூவேந்தரிடத்தும் கோவலன் போன்றசெல்வரிடத்தும் பல்வகை தானமாகப் பெற்றபொன்னிற்கும் ஆவிற்கும் நிலத்திற்கும் பிறபொருள்கட்கும் கங்குகரை யில்லை.

சில வகுப்பாரிழப்பு:

"குழலினும் யாழினும் குரன்முத லேழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்" 

(சிலப்.5:35-7)

என்று இளங்கோவடிகளாற் புகழ்ந்துபாடப்பெற்ற பாணர், மாட்டிறைச்சி யுண்டதனாற்புலையர் என்று இழித்திடப்பட்டு, 11ஆம் நூற்றாண்டிற்குப் பின் தம் தொழிலையும் வருவாயையும்இழந்தனர்.

ஐரோப்பியரும் அவர் வழியினரும்அராபியரும் யூதரும் இன்றும் மாட்டிறைச்சியுண்பவரே. ஆரியப் பூசாரியரும் வேதக் காலத்தில்அதை விரும்பி யுண்டவரே.

தவத்திற் சிறந்த பரத்துவாசர் தம்புதல்வனுடன் காட்டில் வாழ்கையில், விருது என்னும்தச்சனிடம் பல ஆக்களை வாங்கிக் கொன்றுதின்றார் .

செம்மறியாட் டிறைச்சியால் நான்குமாதம் வரையும், வெள்ளாட் டிறைச்சியால் ஆறு மாதம்வரையும், காட்டெருமைக் கடா விறைச்சியால் பத்துமாதம் வரையும், தென்புலத்தார் (பிதுர்க்கள்)பொந்திகை (திருப்தி) யடைகின்றனர் என்று மனுதருமசாத்திரத்திற் கூறப்பட்டுள்ளது.