பக்கம் எண் :

138தமிழர் வரலாறு-2

ஆங்கிலர்க்கும் பிராமணர்க்கும்வேற்றுமை

ஆங்கிலர் 

பிராமணர்

(1)

வாணிகத்திற்கு வேண்டும் பொருளொடும், பாதுகாப்பிற்கு வேண்டிய படையொடும், ஆட்சிக்கேற்றஅறிவொடும், வந்தனர்.

கையுங் காலுமாக வந்தனர்.

(2)

வெண்ணிறமாயிருந்தும், தம்மை மக்களென்றே

வெண்ணிறம் பொன்னிறமாயும கூறினர். செந்நிறமாயும்கருநிறமாயும் மாறிய பின்னும், தாம் நிலத்தேவரென்றே கூறி யேமாற்றினர்.

(3)

தம் மொழி மக்கள்மொழி யென்பதைமறைக்கவேயில்லை.

ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதா  யிருந்தும், தம் முன்னோர்மொழியை யும் இந்தியா விற்புணர்த்த சமற்கிருதம்என்னும் இலக்கிய நடைமொழியையும் (literary dialect),இன்றும் தேவமொழி யென்றே துணிச்சலுடன்சொல்கின்றனர்.

(4)

தாழ்த்தப்பட்ட தமிழருட் கடைப் பட்ட பறையரைத் தம் சமையற்காரராக்கி, அவர் ஆக்கியதையும் படைத்ததையும் பிராமணரும் விரும்பி யுண்ணும்படி செய்தனர்.

தமிழருள் தலைமையானவராகக் கருதப்படும்மரக்கறி வெள்ளாளர், பொற்கலத்திற் கொடுக்கும் தண்ணீரும் குடிக்கத்தகாதது போல் நடிக்கின்றனர்.

(5)

அகக்கரண வாற்றலை வளர்க்கும் உண்மையான அறிவியலைக்கற்பித்தனர். 

தமிழரை அடிமடையராக்கி, அடிமைத்தனத்துள் ஆழ்த்தும் தொல்கதைக்கல்வியைப் புகட்டினர்.

(6)்

தமிழ் ஆரியத்திற்கும்சித்தியத்திற்கும் முந்தியதென்றும், மக்கள் முதன் மொழிக்கு நெருங்கிய தென்றும், கூறினர் (கால்டுவெல்).

தமிழ் சமற்கிருதக்கிளையென்றும் பன மொழிக் கலவை யென்றும் காட்டியுள்ளனர். (சென்னைப் ப.க.க.தமிழ் அகரமுதலி)

(7)

குலம் தொழில்பற்றிய தென்றும் மக்கள் படைப்பென்றும் கூறுகின்றனர். 

குலம் பிறவிபற்றியதென்றும் இறைவன் படைப்பென்றும் அதை இறைவனே சொன் னானென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை)

(8)

ஆங்கிலத்திலுள்ள அயற்சொற்களை யெல்லாம் தாமே தெரிவிக்கின்றனர்.

வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களெல்லாம்வடசொல்லே யென்று வலிக்கின்றனர்.

(9)

கிறித்தவ மதம் உரோம நாட்டினின்று வந்து இலத்தீன் வாயிலாகப் புகுத்தப்பட்டும், தம் தாய்மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர்.

சிவனியமும்மாயோனியமும் முழுத்தூய தமிழ மதங்களாயிருந்தும், தமிழர்கோவில் வழிபாட்டையும் சடங்குகளையும்அவர்க்குத் தெரியாத வடமொழியிலேயே ஆற்றிவருகின்றனர்.