தமிழ்த் துறையில், கடந்த அரைநூற்றாண்டாக நான் செய்து வரும்சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும்அகரமுதலித் தொகுப்பும், தமிழ்ப் புலவர் அனைவரும்அறிவர். தனித்தமிழ் வாரி யாம் மறைமலையடிகள்எனக்குத் தந்த நற்சான்றும், 'செந்தமிழ்ச்செல்வி'யில் வெளியிடப் பெற்றுள்ளது. ஆயினும்,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத்திருத்தவும் மறுபதிப்பு வெளியிடவும், தகுதியில்லாதஐந்தமிழ்ப் புலவர் அமர்த்தப் பட்டுள்ளனர்.ஒவ்வொரு தமிழ்ப் புலவரும் அகரமுதலித்தொகுப்பாளரா (lexicographer)யிருக்க முடியும் என்று, கல்வியமைச்சர் கருதுவதாகத்தெரிகின்றது. அது சரியான கருத்தாயின், ஏனைமொழிகளிலும் எல்லாப் புலவரும் அகரமுதலித்தொகுப்பாளரா யிருத்தல் வேண்டும். அஃதில்லை.அகரமுதலித் தொகுப்பிற்குத் தேர்வுப்பட்டம்பெற்றிருத்தல் மட்டும் போதாது; பன்மொழிப்பயிற்சியும், இருவகை வழக்கறிவும்,சொல்லாராய்ச்சியும் மொழி யாராய்ச்சியும்,சொல்லாக்க நெறிமுறையறிவும், ஆங்கிலச்சொற்பிறப்பியல் அகரமுதலிகளைத் துருவிப்பார்த்தலும் வேண்டும். சாமுவேல் சான்சன், நோவாவெபுசித்தர் (Noah Webster)முதலிய அகர முதலித் தொகுப்பாளர் வரலாற்றைப்பார்த்தால்தான், அகரமுதலித் தொகுப்பிற்குரியதகுதிகள் எவையென்று தெரிய வரும். ஓய்வு பெற்ற சேலங் கல்லூரிவரலாற்றுப் பேராசிரியரும், திரு. பத்தவற்சலனார்முதலமைச்சுக் காலத்திற் கல்லூரிப் பாடப்பொத்தகங்கள் எழுத அமர்த்தப்பட்டவரும்,'முதன்மொழி' ஆசிரியருமாகிய சொக்கப்பனாரின்(எம்.ஏ.,எல்.தி.) தலைமையிற் சென்ற குழு வகுத்துக்கொடுத்த, என் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்அகரமுதலித் தொகுப்புத் திட்டம் தள்ளப்பட்டு,அதற்கு ஒரு குழு அமர்த்தப் படவேண்டுமென்றுதீர்மானிக்கப்பட்டுவிட்டது. இது ஒரு புகைவண்டியைஓட்டுநர் ஒருவர்க்குத் தலைமாறாக (பதிலாக), அதைஇழுத்துச் செல்ல ஒரு குழு அமர்த்த வேண்டுமென்றுசொல்வது போன்றதே. கல்வித் துறை உயர்திரு.மாதவனார் கையில் இருந்திருப்பின் நன்றாயிருந்திருக்கும். அகரமுதலித் திட்டத்தை அவர்ஒருதலையாய் ஒப்புக்கொண்டிருப்பார். குமரன், குமரி என்னும் தூயதென்சொற்களை வடசொல் லென்று தள்ளிவிட்டதுமன்றி, திருவாட்டி என்ற முழுத் தமிழ்ச் சொல்லைநீக்கி விட்டுத் திருமதி என்ற அரைத்தமிழ்ச்சொல்லைப் புகுத்தியதே, இற்றைக்கல்வித் திணைக்களத்தின் நிலைமையை விளக்கப்போதிய சான்றாம். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டஅறிவிப்புத் தொடர்களுள், "அளவோடு பெற்றுவளமோடு வாழ்க" என்பது, "அளவாகப் பெற்றுவளமாக வாழ்க" என்றிருப்பின், சாரியையின்மைக் குற்றம் நீங்கும்.
|