பக்கம் எண் :

156தமிழர் வரலாறு-2

கிளையென்றும் பன்மொழிக்கலவையென்றும் பிராமணப் புலவர் காட்டியுள்ளநச்சுத் தன்மை நிறைந்த சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்தவோ,இற்றையரசு ஒரு சிறு தொகை யும் ஒதுக்கவில்லை.

தமிழ்நாட்டைத் தமிழ்நாடென்றுஅரசிய லேட்டிற் குறித்த தனாலும், அரசினர் சாலைக்கடத்தப் பேரியங்கிகளில் (Govt. RoadTransport Buses) ஒவ்வொரு திருக்குறட்பலகையை ஆணி யறைந்து வைத்ததனாலும், தமிழ்வடமொழியினின்றும் இந்தியினின்றும் விடுதலைபெற்று வளர்ந்துவிடாது.

தமிழின் உண்மையான இயல்பை யறிந்துஅதை அஞ்சாது போற்றிக் காப்பவன் தமிழ்நாட்டுஆட்சித் தலைவனாகும் போதே, "தமிழாய்ந்ததமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல்வேண்டும்" என்னும் பாரதிதாசன் கனவுநிறைவேறியதாகும்.

தமிழ் திரவிடத்திற்குத் தாயும்ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்னும் உண்மையை,உலகறிய நாட்டுவேன். அதன்பின், நடுவணரசு வடமொழிஅகரமுதலிக்குத் தரும் தொகைபோல் ஒன்றரை மடங்கேனும் தமிழகர முதலிக்குத் தராவிடின், தமிழ்நாடுகீழ்வங்க நாடு போற் பிரிந்தே யாகல் வேண்டும்.

சுரை யாழ அம்மி மிதப்பு

தமிழ்ப் புலவர் தமிழைப் பழம்பெருமைக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், ஆசிரியர்அறிவியல் மனப்பான்மை கொள்ள வேண்டு மென்றும்அடிக்கடி அமைச்சரால் சொல்லப்படுகின்றது. ஆயின்,அறிவியல் முறைப்படி தமிழை ஆய்ந்து வளர்ப்பவர்பிழைப்பின்றிச் சாகவும், தமிழைக் காட்டிக்கொடுப்பவர் மேன் மேலுயர்ந்து வாழவுமே, இற்றைத்தமிழ்நாட்டு நிலைமை யுள்ளது. இத்தகை நிலைமையையே,

"சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை"

என்று முன்னோர் பாடிக் காட்டினர். இந்நிலைமையே நீடின், இனித் தமிழு மில்லைதமிழாராய்ச்சியு மில்லை. எல்லா மொழியுங்கலந்த கொடுங் கொச்சைக் கலவைதான் தமிழ் என்றுவழங்கும். அதன்பின்,

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்துசிதைந்தாலும்
சீரியவுன் பழையவிளஞ் செவ்விநினைந் தேத்துதுமே

என்றே பாட நேரும். இன்று நான்உடம்போடிருந்து இந் நூலெழுதுவதற்கு ஏதுவாயிருந்தவர்,பாவலர் பெருஞ்சித்திரனார்,