பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2157

செட்டிகுளத்துநெசவாசிரியர் திரு. நாகமுத்தனார், செங்காட்டுப்பட்டித் திரு. செந்தமிழ்க் கிழார், அன்னத்தாளகஆசிரியர் திரு. முருகனார், என் மதுரை மணிவிழாக்குழுவார், புன்செய்ப் புளியம் பட்டி மறைமலையடிகள்மன்றத்தார், தவத்திருக் குன்றக்குடி யடிகள்ஆகியோரே.

தமிழுக்கு ஒரு நன்மையும் செய்யாதவர்தெருத் தெருவாக விலைக்கு வாங்கவும், தமிழுக்கே தம்வாழ்நாளைத் தத்தஞ் செய்தவர் ஏன் குடியிருக்கவாடகை வீடு தேடித் தெருத் தெருவாய் அலைய வேண்டும்?

முக்குலத்தார் கடமை

தமிழருள் மூவகுப்பார் முதன்மை யானவர்.மரக்கறி வெள்ளாளர் நிறத்திலும் கல்வியிலும்,நாட்டுக்கோட்டைச் செட்டி மார் செல்வத்திலும்,மறவர் மறத்திலும் சிறந்தவராவர். இம்மூவகுப்பாரும் தமிழையும் தமிழப் பண்பாட்டையும்தமிழினத் தாரையுமே தாங்கிக் காத்தல் வேண்டும்.


தமிழ்நாடு முன்னேறும் வழிகள்


தமிழகம் வரவரக் குன்றியமை

ஒரு காலத்தில், முழுகிப் போனதமிழ்நாடாகிய பழம் பாண்டி நாடும் நாவலந் தீவுஎன்னும் இந்தியா தேசமும் தமிழகமாயிருந்தன. பழம்பாண்டிநாடு மூழ்கியபின், விந்தியமலைக்குவடக்கிலுள்ள நிலப்பகுதி பிராகிருதம் என்னும்வடதிரவிட நாடாகி, ஆரியர் வந்தபின் ஆரியாவர்த்தம் என்னும் ஆரிய நாடாக மாறிற்று.

அதன் பின், குசராத்தி மராட்டியம்ஒட்டாரம் (ஒரிசா) ஆகிய நாடுகள், முன்பு திரவிடமாகமாறிப் பின்பு ஆரியமாகத் திரிந்தன.

அதன்பின், வடுகம் என்னும் தெலுங்கநாடும் பின்னர்க் கன்னட நாடும் திரவிடமாகமாறின. கன்னடநாடு 7ஆம் நூற்றாண்டுவரைதமிழ்நாடாகக் கருதப்பட்டது. அதனால்,வடகன்னடத்திலுள்ள கோகர்ணம் அப்பர்சம்பந்தர் ஆகிய இருவரின் தேவாரப்பாடல்பெற்றது. அம் மட்டத்திற் கீழ்கரை வரையுள்ளஇற்றைத் தெலுங்கு நிலமும், அன்று தமிழ்நிலமாயிருந்தது.

கன்னட நாடு தோன்றியபின், தெலுங்கநாட்டின் தென் எல்லை அல்லது தமிழகத்தின்வடஎல்லை, சற்றுத் தெற்கே தள்ளி வந்தது.

பன்னிரண்டாம் நூற்றாண்டின்பின்,மூவேந்தர் தமிழ்நாடு களுள் ஒன்றான சேரநாடு,கேரளநாடு அல்லது மலையாள நாடு என்னும் திரவிடநாடாகப் பிரிந்துவிட்டது.