கூறுவதும், ஆசிரியன் மாணவனைப்பிறப்பில் தாழ்ந்தவ னென்றும் மாணவன்ஆசிரியனைப் பிறப்பில் தாழ்ந்தவனென்றும்கொள்வதும், எத்துணைக் கேடான செயல்! இத்தகைக்கல்வியால் ஒரு நாடு முன்னேற முடியுமோ? பிறவிக்குலப் பிரிவினையால் விளையும்பெருங்கேடுகள் (1) | உலகுள்ள அளவும் ஒற்றுமை யின்மை. | (2) | இன முன்னேற்ற மின்மை. | (3) | தமிழ்மொழி யிலக்கிய வளர்ச்சியின்மை. | (4) | தமிழப் பண்பாட் டழிவு. | (5) | அடிமைத்தனமும் தாழ்வும் தொடர்கை. | (6) | மதிவிளக்கமும் உடல் வலிமையுமுள்ளமகப்பேறின்மை. | (7) | அயலார்க்கும் தகுதியில்லார்க்கும்பதவிப் பேறு. | (8) | பகுத்தறிவைப் பயன்படுத்தாமை. |
ஒருவர் எத்துணை யுயரினும், தம்மைநாடார் என்று சொல்லிக் கொள்ளின், குல ஏணியில்அவருக்குரிய படியில்தான் அவரை வைப்பர். அதனால்அவர் வெள்ளாளரொடு உறவாட முடியாது. அங்ஙனமே,வெள்ளாளரும் எத்துணை உயர்வா யிருப்பினும், அவர்பிராமணருக்குத் தாழ்ந்தவராகவே கருதப்படுவர்.ஆதலால், ஆரியக் குல ஏணியைத் தூள் தூளாக்கிச்சுட்டெரித்தல் வேண்டும். ஒரு குலத்தாரிடை ஒரு நற்பழக்கமிருப்பின், அதைப் பிறரும் மேற்கொள்ள வேண்டும்;தீப்பழக்க மிருப்பின் அதை விட்டொழிக்கவேண்டும். நாகரிகம், துப்புரவு, ஒழுக்கம், கல்வி,செல்வம், அதிகாரம், மதிநுட்பம்முதலியவற்றாலேயே உண்மையான உயர்வு உண்டாகும்.நான் கார்காத்த வெள்ளாளன் என்றும், நான்படைத்தலைக் கவுண்டன் என்றும் சொல்வதால்மட்டும் உயர்வுண்டாகாது. துருக்கியைத் திருத்திமுன்னேற்றிய கமால் பாசா போல், ஒருவர்தமிழ்நாட்டிற்குத் தேவை. கல்வியறிவிற் சிறந்தஅண்ணாதுரை யாரினும் ஆள்வினையிற் சிறந்த அருட்செல்வனார்(கருணாநிதி யார்), அப் பொறுப்பேற்றுக் குமுகாயத்துறை மேடுபள்ளங்களைச் சமப்படுத்தி, தாம்தமிழவேள் என்று நாட்டுவாரா? "நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொ ளொன்றோ தவங்கல்வி யான்வினை யென்றிவற்றா னாகுங் குலம்." | (நாலடி.195) |
|