காலக் கடப்பு உலகத்தில் முதன்முதல் தோன்றிநாகரிக விளக்கேற்றிய நாடு தமிழகம். பிந்தித்தோன்றிய நாடுகளெல்லாம் முன்னேறிவிட்டன. ஆங்கில நாடு தோன்றியது 5ஆம்நூற்றாண்டு; முன்னேறியது 18ஆம் நூற்றாண்டு. அமெரிக்கஒன்றிய நாடுகள் (U.S.A.)தோன்றியது 18ஆம் நூற்றாண்டு; முன்னேறியது 19ஆம்நூற்றாண்டு. அ.ஒ.நா. ஆங்கில நாட்டின் கான்முளையே. பிரான்சு தோன்றியது கி.மு. 7ஆம்நூற்றாண்டு; முன்னேறியது கி.பி. 19ஆம் நூற்றாண்டு.செருமனி தோன்றியது கி.மு. 4ஆம் நூற்றாண்டு;முன்னேறியது 19ஆம் நூற்றாண்டு. இரசியா தோன் றியதுகி.பி. முதலாம் நூற்றாண்டு; முன்னேறியது 20ஆம்நூற்றாண்டு. இவற்றின் முன்னேற்றத்திற் கெல்லாம்மூலம் ஆங்கில முன்னேற்றமே. சப்பான் தோன்றியது தோரா.கி.மு. 2000;முன்னேறியது கி.பி.19 ஆம் நூற்றாண்டு. சீனம் தோன்றியதுதோரா.கி.மு. 20,000; தாள் செய்தது கி.பி. 2ஆம்நூற்றாண்டு; அச்சுப்பொறி புனைந்தது கி.பி. 6ஆம்நூற்றாண்டு;மேலையறிவியல் முறையில் முன்னேறியது20ஆம் நூற்றாண்டு. தமிழன் முதன் முதலடைந்த முன்னேற்றம்மூவாயிரம் ஆண்டாகத் தடுக்கப்பட்டுள்ளது.இன்றேல், அவன்தான் முதன் முதல் திங்களையடைந்திருப்பான். இன்றுள்ள மக்கட்பெருக்க வேகம்தொடரின், அடுத்த நூற்றாண்டு கொடிய உணவுப்பஞ்சமும் உறையுட் பஞ்சமும் ஏற்படுமென்று, மக்கள்நூலார் (Demographers)அடிக்கடி வன்மையாக எச்சரித்து வருகின்றார்.கிறித்தவ ஊழியர் உலக முடிவு நெருங்கிவிட்டதென்கின்றனர். இந் நிலையிலும், கடத்திவையாதுஉடனே தமிழன் முன்னேற முயல வேண்டும். தமிழன் முன்னேற்றத் தடை
உயரப் பறக்கும் பருந்தின் காலிற்கட்டப்பட்டுள்ள பாறாங்கல் போல், தமிழன்உயர்முன்னேற்றத்தைத் தடுப்பது, பிராமண னுயர்வைஅடிப்படையாகக் கொண்ட பிறவிக்குலப்பிரிவினையே. பிராமணன் பிறப்பில் உயர்ந்தவன்அல்லன். அவன் எளிய இரப்போனாய் இங்கு வந்தவன்."முட்டிபுகும் பார்ப்பார்" என்று கம்பர்பாடியிருத்தல் காண்க. பண்டை வெண்ணிறமும் இன்றவனுக்கில்லை. இன்று வெள்ளையரா யிருப்பவர்ஐரோப்பியரும் அவர் வழியினருமே. மாந்தன்மூச்சொலியும் முழங்கொலியும் தம்மளவில்இறைவனுக் கேற்றவை யல்ல. கழுதை கத்தலும் அரிமாஉரறலும் களிறு பிளிறலும் மாந்தனொலிகளினும்வலியன.
|