பக்கம் எண் :

166தமிழர் வரலாறு-2

இறைவனை இன்புறுத்துவது ஏழை யடியானின் தூயவுள்ளமே. கல்லா அடியானின் திருந்தாச் சொல்லே,கடவுட்குக் குழலினும் யாழினும் இனிய மழலைமொழி.சிவநெறியும் திருமால் நெறியும் ஆரியர்இந்தியாவிற்குட் புகுமுன்னரே தமிழர் கண்டமதங்களே. என் 'தமிழர் மதம்' என்னும் நூலில் இதுவிரிவாக விளக்கப் பெறும். வேதத்திற்கும் தமிழ்மதங்கட்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஆதலால்,சிவனியன் என்றோ திருமாலியன் என்றோ,இரண்டிற்கும் பொதுவாகத் தென்மதத்தான் அல்லதுதமிழ மதத்தான் என்றோதான் தமிழர் தம்மதத்தைத் தெரிவித்தல் வேண்டும்.கிரேக்கத்திற்கு நெருங்கிய கீழையாரியமும்,அதுவும் பிராகிருதமுங் கலந்த வேதமொழியும்,வேதமொழியும் தமிழுங் கலந்த சமற்கிருதம் என்னும்இலக்கியமொழியும் தேவமொழியல்ல.அவற்றிற்கெல்லாம் மூலம் தமிழே.

தமிழன் ஒவ்வொருவனும் தான்பிறப்பில் தாழ்ந்தவன் அல்லன் என்று கருதி,

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தம்
கருமமே கட்டளைக் கல்." 

(குறள்.505)

என்னும் நெறிமுறையைக்கடைப்பிடித்தொழுக வேண்டும். அதுவே கார்டியன்முடிச்சறுக்கும் (Cutting the Gordian knot)வழி.

ஆரிய வேடனின் அயர்ந்தனை மறந்தனை
சீரிய மொழிநூல் செவ்விதி னுணர்த்தலின்
மூரிய பெருமையை முற்று முணர்ந்தினே
பூரிய அடிமையைப் போக்குவை தமிழனே.

பிராமணியத்தால் தமிழன்முன்னேற்றம் மட்டுமன்றி, உலக வரலாறு (WorldHistory), குமுகாய, பண்பாட்டு மாந்தனூல் (Socialand Cultural Anthropology), பொது மொழிநூல் (GeneralLinguistics) என்னும் உலகந்தழுவியமூவறிவியல் வளர்ச்சியும் தடைப்படுகின்றது.


தமிழ்நாட்டுப் பிராமணர்க்கு ஓர் அன்பெச்சரிக்கை

அன்பர்காள்,

நும் முன்னோர், வேறெந் நாட்டிலும்அயலார் கையாளாத வலக்காரங்களைக் கையாண்டு,கள்ளங் கரவற்ற பண்டைத் தமிழ் மூவேந்தரையும்ஏமாற்றி வயப்படுத்தி, அவர் வாயிலாகத்தமிழரிடை நும் தன்னலச் சிறுதெய்வ வேள்விமதத்தைப் புகுத்தி, அதனால் தமிழ் கெடவும்தமிழிலக்கியம் இறந்துபடவும், தமிழர் இழிந்துசிதறி விடவும் செய்துவிட்டனர். அத் தீத்தொழிலை, அறிவாராய்ச்சியும் உரிமை