நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்றுவந்தேறிகள் என்னும் தவறான கொள்கையினரே. ஒரு நாட்டு இலக்கியத்தை அயலார் கற்றுஅதில் தேர்ச்சி பெறலாம். ஆயின், அதன் மொழியை,அதைத் தாய்மொழியாகக் கொண்டவரொடு பிள்ளைப்பருவத்தினின்று நெருங்கிப் பழகினா லொழிய, ஒரேதலைமுறையில் அவர்போல் முற்றக் கற்க முடியாது. ஓய்வு பெற்ற சமற்கிருதப்பேராசிரியரான பரோவும் (T.Burrow)எமெனோவும் (M.B. Emeneau)தொகுத்துள்ள திரவிட அகரமுதலி, 'திரவிடச்சொற்பிறப்பியல் அகரமுதலி' (ADravidian Etymological Dictionary) என்று பெயர்பெற்றிருப்பினும், உண்மையில் ஓர் ஒப்பியல்அகரமுதலியே (A Comparative Lexicon). கால்டுவெலார் கருத்திற் கிணங்கத்தமிழை ஆழ்ந்து கற்றுத் திரவிடமொழிகளைக்கொடிவழி முறைப்படி (Geneological method)ஆராயாது, இற்றை வண்ணனை மொழிநூல் (DescriptiveLinguistics) போல் ஒப்பியல் முறைப்படி (Comparativemethod) மட்டும் நோக்கி, தமிழிலுள்ளதவறான சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியையும்,தமிழைத் தாய்மொழியாகப்பயன்படுத்திக்கொண்டே அதை இயல்பாக வெறுக்கும்பிராமணக் குலத்தைச் சேர்ந்த, (P.S.)சுப்பிரமணிய சாத்திரியார் எழுதியதொல்காப்பிய எழுத்ததிகார சொல்லதிகாரக்குறிப்புரைகளையும், அளவை நூல்களல்லாதபிறவற்றையும், தமிழறியாதவர் தொகுத்த திரவிடமொழி யகரமுதலிகளையுமே, அடிப்படையாகக் கொண்டுதொகுத்ததனால், அவர் அகரமுதலி பின்வருமாறு பலபிழைபாடுகள் மலிந்துள்ளன. (1) | தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தென்னும் அடிப்படை யுண்மையை அறியாமை. | (2) | சமற்கிருதம் முந்தியதென்றும் அதனால் தமிழ் வளம் படுத்தப் பட்டதென்றும் ஒரு முற்கோள் (Prejudice) உடைமை. | (3) | அங்கணம் (anganam) என்பதை யமேயயேஅ என்றும், அஞ்சு (anju) என்பதை ancu என்றும், அண்டி (andi) என்பதை anti என்றும், அந்தணன் (andanan) என்பதை antanam என்றும், அம்பு (ambu) என்பதை ampu என்றும், தவறாக ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்த்துள்ளமை. | (4) | பல தென்சொற்களை ஆரியமாக அல்லது சமற்கிருதமாகக் காட்டியுள்ளமை. |
|