பக்கம் எண் :

தமிழர் வரலாறு-251

என்று கபிலர் பாடியதை இருங்கோவேள்ஏற்றுக்கொண்டது போன்றே, இளந்திரையனும்உருத்திரங்கண்ணனார் பாடியதை ஏற்றுக் கொண்டான்என்று கூறி விடுக்க.

கொங்குநாடு

கொங்கு என்பது மணம், பூந்தாது, தேன்,கள், கருஞ்சுரை, சொங்கு (உமி அல்லது புறத்தோல்),குவிவு என எண் பொருள்படும் பலபொரு ளொருசொல்.கொங்குநாட்டில் தேன் மிகுதியாக அல்லதுசிறந்ததாகக் கிடைப்பதால், அந் நாடுகொங்குநாடெனப்பட்டது என்று பலர் கூறுவர். தேன்கொங்குநாட்டிற்கே சிறப்பாக வுரிய தன்று.சோலைகள், சிறப்பாக இயற்கைச் சோலைகள் உள்ளஇடமெல்லாம் தேன்கூடு கட்டப்படும். அத்தகையசோலைகளாற் போர்க்கப் பட்டிருப்பவைபெருமலைகள் அல்லது உயர்மலைத்தொடர்கள்.கொங்குநாட்டு மலைகளிற் போன்றே பிறநாட்டுமலைகளிலும் தேன் கூடு கட்டும்.

"அணிநிறவோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரியும்" 

(புறம். 109)

பறம்புமலை, முற்காலச் சோழநாட்டைஅல்லது பிற்காலப் பாண்டி நாட்டைச்சேர்ந்ததாகும். பறம்புலைத் தேன் எவ்வகையிலும்திறக் கேடுள்ள தன்று. கொங்குநாட்டு ஆனைமலையை ஒருகூறாகக் கொண்ட குடமலைத்தொடர், நெல்லைமாவட்டத் தென்கோடி வரை செல்கின்றது. அங்கும்தேன்கூடு கட்டத்தான் செய்கின்றது.

கொங்குநாட்டின் பண்டைக் காலப்பரப்பைப் பலர் சரியாக அறியவில்லை. குடகமும்எருமையூர் (மைசூர்) நாடும் சேலங் கோவைமாவட்டங்களும் சேர்ந்ததே முதற்காலக்கொங்குநாடாம். அதில் உடல்போல் மிகுந்திருந்ததுஎருமையூர் நாடே. மூவேந்தர் நாடுகளுள்ளும் உயர்ந்துகுவிந்திருக்கும் நிலப்பகுதி எருமையூர் நாடென்பதை,புறணிப் படத்தையும் (relief map)மட்டக்கோட்டுப் படத்தையும் (contourmap) பார்த்துத் தெளிக. சேரநாட்டின் கீழைப் பகுதி, மலைகளாலும் உயர்நிலமட்டத்தாலும் குவிந்திருப் பதனாலேயே கொங்குநாடெனப்பட்டது.

கும் - கும்மல் = குவியல். கும்மி = கை குவித்தடித்து விளையாடும் விளையாட்டு. கும்மி - கொம்மி.

கும் - கொம் - கொம்மை = 1. மேடு. 2.அடுப்புக் குமிழ். 3.கதவுக் குடுமி. 4.கொம்மட்டிக்காய் (கும்மட்டிக்காய்). 5.கை குவித்துக் கொட்டுகை. 6.இளமுலை. "வாரணி கொம்மை" (பரிபா.22:30)