நாற்பொருட் பேறுமக்களெல்லார்க்கும் பொதுவா யிருக்கவும், அந்நான்கும் பிராமணர்க்கே யுரியவை யென்றும்,அவற்றுள் முதன் மூன்றே அரசர்க்கும் முதலிரண்டேவணிகர்க்கும் முதலொன்றே சூத்திரர் என்னும்வேளாளர்க்கும் உரியவை என்றும், மதத்துறையும்குமுகாயத் துறையும் தழுவுமாறு இலக்கியத் துறையில்வகுத்து விட்டனர். ஒரு நாடகக் கதையை அல்லது பனுவலைஅமைக்கும்போது அல்லது இயற்றும்போது, அக் கதைதலைவனின் குலத்திற் கேற்பப் பொருளை வகுக்கவேண்டுமன்பது, நூன்முறை யாகிவிட்டது. இதைக் கழகப்பாண்டியருள் ஒருவனும் நாடக நூலாசிரியனுமானமதிவாணனும் கடியாது மதிவீணனாயினன். "அறமுதல் நான்கும் ஒன்பான் சுவையும் முறைமுன் நாடக முன்னோ னாகும்" | | "அறம்பொரு ளின்பம் அரசர் சாதி." | | "அறம்பொருள் வாணிகர் சாதியென் றறைப." | | "அறமேற் சூத்திரர் அங்க மாகும்." | (செயிற்றியம்) |
இங்ஙனமே தொண் (ஒன்பான்) சுவைகட்கும்வரணப் பாகுபாடு வகுக்கப்பட்டுள்ளது. இதனின்று,கடைக்கழகக் காலத்திலேயே, மூவேந்தரும் மதத்துறையில் எத்துணை அடிமடையராயினர் என்பதைஅறிந்துகொள்ளலாம். களப்பாளர் (களப்பிரர்) ஆட்சி (தோரா. கி.பி. 300-590) கடைக்கழக முடிவிற்குப்பின்பாண்டிநாட்டை முந்நூற்றாண்டு ஆண்ட, களப்பாளர்வடநாட்டினின்று வந்தவ ரென்றும், பல்வகுப்பினரென்றும், பலவாறு சொல்லப்படுகின்றது. அவர்பல்வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதிபிராமணர்க்கு அளித்த வேள்விக்குடிப்பட்டையத்தை மறுத்ததனாலும், முருக வழி பாட்டினர்என்று சொல்லப்படுவதனாலும், தமிழராகவும்இருந்திருக்கலாம். களப்புதல் = காடு வெட்டித்திருத்துதல். நெல்லை மாவட்டத்திற்சங்கரநயினார் கோவில் வட்டத்தில், களப்பாளர்குளம் என்று ஓர் ஊர் உள்ளது. களப்பிலார் என்பதுகள்ளர் வகுப்பாரின் பட்டங்களுள் ஒன்றாக,பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்குறித்துள்ளார்.
|