பக்கம் எண் :

88தமிழர் வரலாறு-2

பல்லவர் ஆட்சி (சோழநாடு)
(கி.பி.4ஆம் நூற்.- 9ஆம் நூற்.)

பல்லவர் காடவரும் காடுவெட்டிகளுமானதமிழரே.

பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) 

590 - 920

சோழர் ஆட்சி (சோழநாடு) 

850 - 1279

(சோழபாண்டிநாடுகள்) 

920 - 1190

பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) 

1190 - 1310

மாலிக்கு காபூர் தமிழ்நாட்டுக்கொள்ளையடிப்பு 

1310

மதுரைச் சுலுத்தானியம் 

1329-1377

செஞ்சி - 

(1)  நாயக்கர் ஆட்சி  1476-1639

(2)  முசல்மானர் ஆட்சி  1639-1659

(3)  பீசபூர்-மராத்தியர் ஆட்சி  1677-1690

(4)  முசல்மானர் ஆட்சி  1690-1698

(5)  பிரெஞ்சியர் ஆட்சி  1750-1761

(6)  ஆங்கிலர் ஆட்சி  1761-1947

மதுரை - 

(1)  நாயக்கர் ஆட்சி  1529-1736

(2)  முகமதியர் ஆட்சி  1736-1772

(3)  ஆங்கிலர் ஆட்சி  1772-1947

தஞ்சை - 

(1)  நாயக்கர் ஆட்சி  1532-1675

(2)  மராட்டியர் ஆட்சி  1675-1855

(3)  ஆங்கிலர் ஆட்சி  1855-1947

சேரநாட்டு அரசர்கள்

கடைக்கழகக் காலத்திலேயே, மேலைச்சேரநாடாகிய குடமலை நாடு, தென்வடலாக வேணாடுகுட்டநாடு பொறைநாடு குடநாடு கொண்கானநாடு எனப் பலபிரிவுகளைக் கொண்டிருந்தது. அவற்றுள் கொண்கானநாட்டை நன்னனும், ஏனையவற்றை உதியன் மரபினரும்பொறையன் மரபினருமான இருவேறு சேரர்குடிக்கிளையினரும் ஆண்டுவந்தனர்.

"இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றம் தந்த வாய்வாட்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடுதந் தன்ன" 

(அகம்.199)