என்பதனால், கொண்கான நாடு மீண்டும்சேரர்கை சேர்ந்தமை அறியப்படும். கீழைச் சேரநாடாகிய கொங்குநாட்டின்தென்பகுதியான தகடூர் நாட்டை, அதிகமான்மரபினரான சேரர்குடிக் கிளையினர் ஆண்டு வந்தனர்.வடபகுதியின் மேற்பாகத்துக் குடகுநாட்டைக்கோசரும், எஞ்சிய பாகத்தை எருமையூரன்இருங்கோவேள் கங்கர் கட்டியர் ஆகியோரும்ஆண்டுவந்தனர். "கொங்கிளங் கோசர்" | (சிலப். உரைபெறு கட்டுரை) | "குடகக் கொங்கரும்" | (சிலப்.30:159) |
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மேலைச்சேரர்குடிக் கிளைகள் நேர்வழித் தொடர்ச்சியற்றன. அதன் பின், பெருமாள் மரபினர் சிலர்ஆண்டு வந்தனர். அவருள் மூவர் குறிப்பிடத்தக்கவர். முதலாம் சேரமான் பெருமாள் (667 - 712) இவர் பெருமாக் கோதை என்னும்இயற்பெயரையும் கழறிற் றறிவார் என்னும்சிறப்புப் பெயரையும் உடைய சிவனடியார். நாலாம் குலசேகரப் பெருமாள் (754 - 98) இவர் குலசேகராழ்வார் என்னும்திருமாலடியார். இரண்டாம் சேரமான்பெருமாள் (798 - 834) இவர் ஓர் 'இசலாம்' அடியார். நாட்டைப்பன்னிருவர்க்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டுமெக்கா சென்றுவிட்டார். (துடிசைகிழார்: சேரர்வரலாறு). அப் பன்னிரு நாடுகளாவன : (1) கோழிக்கோடு | (7) சிரக்கல் | (2) வள்ளுவநாடு | (8) கடத்தநாடு | (3) கொச்சி | (9) பாலக்காடு | (4) திருவிதங்கூர்(திருவதங்கோடு) | (10)பெய்ப்பூர் | (5) குறும்பரநாடு | (11) பரப்பநாடு (ஒரு பகுதி) | (6) கோட்டயம் | (12) பரப்பநாடு (மற்றொருபகுதி) |
சேரநாட்டுத் தமிழ், 10ஆம்நூற்றாண்டிற்குப் பின் கொடுந் தமிழாகத்திரிந்து, 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் திரவிடமாகமாறிவிட்டது. சேர (சேரல) நாடும் மொழியும் கேரளம்எனப்பட்டன. சேரல்-சேரலம்-கேரளம்.
|