சமற்கிருத மொழியும் பிராமணப்போற்றியானும் ஆரியத் தொல் கதைகளுந் தவிர,ஆகமப் பொருள் அனையவும் ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் தமிழிலும் உள்ளவையே என்றறிதல்வேண்டும். ஆகமம் என்னும் சொற்கே, புதிதாக வந்ததுஅல்லது தோன்றியது என்பதுதான் பொருள். எல்லாவகையிலும் ஆரியத்தை எதிர்க்கக்கூடிய தமிழநாகரிகக் கோட்டையான தென்னாடு பிடிபட்டுப்போகவே, இந்தியா முழுதும் மதத்துறையிலுங்குலத்துறையிலும் ஆரிய வயப்பட்டுவிட்டது. பிராமணப்பூசகனே சமற்கிருதத்திற் போற்றி செய்வது,தமிழ்நாட்டுக் கோவில் மரபாயிற்று. முதற் பராந்தகச் சோழன் (கி.பி.907-53),வேதம் வல்ல பிராமணர்க்கு வீரநாராயணபுரம் முதலியஊர்களை முற்றூட்டாகக் கொடுத்து, பொற்கருப்பைத்தானமும் ஆள்நிறைப் பொன் தானமுஞ் செய்தான்.ஆற்றூர் (ஆத்தூர்), திருத்தவத்துறைக் (லால்குடி)கோவில்களில், பூசைவேளையில் திருப்பதிகம் ஓதப்பிராமணரை அமர்த்தினான். முதலாம் இராசராசன் (கி.பி.958-1014)கட்டின தஞ்சைப் பெருவுடையார் கோவிற் கோபுரம்,தாசுமகால் இந்தியாவிற்குத் தருவதினும்பதின்மடங்கு பெருமை தமிழகத்திற்குத் தருவதாகும்.ஆயின் அவனும் அடிமையானதனால், சோழ மார்த்தாண்டசதுர்வேதி மங்கலம் என்னும் திருவியலூரில்,ஆள்நிறைப் பொன் தானஞ் செய்தான். அவன்தேவியும் பொற்கருப்பைத் தானஞ் செய்தாள்.அவனுக்குக் குருக்களா யிருந்தவர்கள் இலாடம், காசி,காசுமீரம் முதலிய வடநாடுகளிலிருந்துவரவழைக்கப்பட்ட பிராமணர்கள். அவர்கள்பெருமடத் தலைவர்களாயிருந்து அரசியலில் மிகுந்தசொற்செல்வு பெற்று விளங்கினர். இலாடம்வங்கநாட்டின் ஒரு பகுதி. அப்பர், சம்பந்தர்,சுந்தரர் ஆகியமூவரும் பாடிய தேவாரப் பதிகங்கள் மொத்தம் 96,000என்று சொல்லப்படுகின்றது. இன்று கிடைத்திருப்பவைஎழுநூற்றுத் தொண்பத்தாறே(796). இவற்றுள் ஒருசிலவேஇராசராசன் காலத்திற் கோவில்களிற்பாடப்படும் வழக்கிலிருந்தன. ஏனையவற்றின்ஏடுகளையெல்லாம் பிராமணர் தொகுத்து,தில்லையம்பலத்தில் ஓர் அறைக்குளிட்டுப் பூட்டிவிட்டனர். இராசராசன் இம் மருமத்தை யறிந்து, அவ்வறையைத் திறக்கச் சொன்னான். கோவிற்சொத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததில்லைவாழந்தணர் என்னும் மூவாயிரம் பிராமணரும்மறுத்துத் தடுத்தனர். இராசராசன் ஒரு சூழ்ச்சிசெய்து திறப்பித்தான். சிதல் அரித்த ஓர்ஏட்டுக் குவியல் காட்சியளித்தது. உடனே, "அரசே!கவலற்க. இக்காலத்திற்கு வேண்டியவற்றை மட்டும்வைத்துக்கொண்டு, வேண்டாதவற்றை யெல்லாம் யாமேசிதலரிக்க
|