கருவிப்பொருள்களைக் கொண்டு நாகரிக வாழ்க்கைக் கேற்றபற்பல தொழில்களைச் செய்துவந்தனர். (6) தொழிற் பிரிவுகள் நாகரிகமும் மக்கள்தொகையும்மிகுந்தபின், எல்லாத் தொழில்களும் அல்லதுவகுப்புகளும் இரண்டும் பலவுமாகப் பிரிந்தன. (7) பெயர் மாற்றங்கள் மக்கள் பெருநிலப் பரப்பிற் படர்ந்துபரவினபின், ஒரே வகுப்பார்க்கே இடவேறுபாட்டால்பெயர் வேறுபாடு ஏற்பட்டது. தொழில்கள் நிகழும் வகைகள் விளைப்பு, வளர்ப்பு, பிடிப்பு, தொகுப்பு,புணர்ப்பு, செய்வு, பிரித்தெடுப்பு, பண்டமாற்று,நிலைமாற்று, காப்பு (மாந்தன் காப்பு, தெய்வக்காப்பு), ஆள்வு, செப்பனீடு, விலக்கு, வாழ்விப்பு,இன் புறுத்தம், ஆய்வு, அறிவிப்பு, உய்ப்பு,உடலுழைப்பு, அழிப்பு முதலியன. குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள் (1) | நிறம் - வெள்ளாளன் (வெண்களமன்), காராளன் (கருங்களமன்), இருளன். | (2) | இடம் - சோழிய வேளாளன், ஆர்க்காட்டு முதலி, மலையாளி. திசை - தென்றிசை வெள்ளாளர், மேல்நாட்டான். | (3) | குடியிருப்பு - கோட்டை வெள்ளாளன், தெருவான் (சேரநாட்டுச் சாலியன்). | (4) | ஊண் - சைவ (மரக்கறி) வெள்ளாளன், புலையன், தவளை தின்னி (பறையன்). | (5) | உடை - தண்டப்புலையன், குளிசீலையாண்டி (கோவணாண்டி). | (6) | அணி - பவளங்கட்டி (கொங்கு வெள்ளாளர்). | (7) | தாலி - சிறுதாலி மறவர், ஐந்தாலி (அஞ்சாலி)யிடையர். கொண்டைமுடிப்பு-கொண்டை கட்டி வேளாளர். | (8) | கோலம் - பச்சைகுத்தி (குறவர், வேளாளர்), நீறுபூசி (வெள்ளாளன்). | (9) | முதற்கருவி - பொற்கொல்லர், வெண்கலக் கன்னார். |
|