|
தமிழுக்குப் பகைவர்களாகவே, வெளிப்
படையாக அப்படி உள்ளவர் களையே கருத்து
மாறுபாடுள்ளவர்களையே பார்த்துத் தலைவர்களாக
வைத்திருப்பார்களா?
நீலகண்ட சாத்திரியாரைப் பற்றி
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்
இந்தியாவிலேயே சிறந்த வரலாற்றறிஞர்.
அவருக்கீடாக ஒருவருமே இல்லை. அவர்
அவ்வாராய்ச்சிக்கு வேண்டிய சிறந்த கருவி நூல்களை
யெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். நூல்
தொகுப்பில் அவரை டார்வினுக்கு அடுத்தபடியாகச்
சொல்லலாம். ஆனால் அவர் ஒரு தமிழ்ப் பகைவர்.
வேண்டுமென்றே தமிழுக்கு மாறாக, உண்மைக்கு மாறாக
எழுதி வைத்திருக்கிறார். சமசுக்கிருதத்தைப்
பற்றியோ ஆரியத் தைப் பற்றியோ
சொல்லுவதென்றால் துரும்பைத் தூணாக்குகிறார்.
தமிழைப் பற்றியோ தமிழர்களைப்பற்றியோ
சொல்லுவதென்றால், தூணைத் துரும்பாக்குவது
மட்டுமில்லை; ஒன்றுமில்லாதபடி ஆக்கி
விடுகின்றார். அவர் ஏராளமாக நூல்கள்
எழுதியுள்ளார். முதலில் அவர், History
of South India என்று ஒரு பொத்தகம்
எழுதினார். அதிலே அவர், மு. இராகவய்யங்கார்
சொன்னதைத் துணைக் கொண்டு, அஃதா வது, "பொய்யும்
வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம்
என்ப" என்று தொல்காப்பியத்திலே ஒரு நூற்பா
இருக்கிறது; இதில் உள்ள ஐயர் என்ற சொல்லுக்குப்
பிற்காலத்து வழக்கைத் துணையாகக்கொண்டு ஆரியர்
என்று பொருள் கூறிவிட்டார். அவரும் (அஃதாவது
நீலகண்ட சாத்திரியாரும்) அதை ஒப்புக்கொண்டு,
"தமிழர்கள் அக்காலத்தில் மணமுறையில்லாமல்
விலங்குகள் போல் திரிந்தார்கள்;
அவர்களுக்கெல்லாம் மணமுறையை ஏற்படுத்தி
வைத்தவர்கள் ஆரியப் பிராமணர்கள் என்று
எழுதிவைத்திருக்கிறார். பிறகு Historian
Culture of the Tamils என்று ஒரு பொத்தகம்
எழுதினார். அதிலே, கால்டுவெல்,
"கொற்கையிலேதான் தமிழ் நாகரிகம் தோன்றியது;
அக் காலத்திலே தமிழர்கள் நாகரிகத்தின்
தொடக்க நிலையிலே இருந்தார்கள் என்று, எழுதி
வைத்ததை அடிப்படையாகக் கொண்டு, இவரும் அப்படியே
எழுதி வைத்துவிட்டார். அக்காலத்தில்
கால்டுவெல்லுக்கு வழிகாட்ட வல்ல தமிழ்ப் புலவர்
ஒருவரும் இல்லை. ஆனால் நம் மனோன்மணியம்
சுந்தரனார் அவர்கள் 1908-லேயே "India
proper in the South" தென்னாடுதான்
உண்மையான இந்தியா-என்றார் "Indian
Antiquary" என்ற ஓர் இதழிலே! அதற்குப்
பின்னால் 1912-ல் இந்திய வரலாற்றை எழுதிய வின்சென்ட்
சிமித் என்ற ஆங்கிலேயர் (அவர்தாம் இந்திய
வரலாற்றை ஓரளவு சிறப்பாக எழுதி யவர்) இந்தக்
கருத்தைத்தழுவி, "இந்தியாவின் வரலாற்றைத்
தென்னாட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்" என்று
மிகத் தெளிவாக எழுதியுள்ளார். "To
find the basic element of Hindu Culture, by a study of Sanscrit and the history
of Sanscrit in the upper India, is to begin the problem and its the worst and
most Cemplicated points" என்று சொல்கிறார்.
மேலும்
|