பக்கம் எண் :

70பாவாணர் உரைகள்

தாழ்த்தியே எழுதி வைத்திருக்கின்றார். அவர்கள் தமிழரைப்பற்றிய வரலாற்றைத் தொடக்குவதெல்லாம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தான். மெகசுதனிசு என்ற நாடுகாணி முதன் முதல் பாடலிபுரத்திற்குப் போனானே (பாடலிபுரம் என்பது பாட்னா) அந்தக் காலத்திலிருந்துதான் இந்திய வரலாற்றையே தொடங்குகிறார்கள். இக்கால் புதியதாக ஒரு நூல் வந்திருக்கின்றது. சுப்பிரமணியம் என்னும் பேராசிரியர் ஒருவர் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருப்பவர். அவர் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றவர். (அவரும் இன்னொருவரும் தமிழ்ப் பேராசிரியர் களாகத் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றனராம். அவர்கள் இருவரும் தங்களுக்குள் நான் பெரியவன், நீ சிறியவன் என்று திருமாலும் பிர மாவும் போரிட்டுக் கொண்டது போலப் போரிட்டுக்கொண்டு இருந்தார் களாம். அதன்பின் மு.வ. அங்குப் போய்ச் சேர்ந்தபின் இருவரையும் இரண்டு துறைகளுக்குப் பேராசிரியராக்கி அமைதிப்படுத்தினாராம். நம் பேராசிரியர்கள் இப்படிப் பட்ட வகைகளில்தாம் போரிட்டுக் கொண் டிருக்கின்றார்களே தவிர, தம் மொழிக்கோ இனத்துக்கோ ஏற்படுத்து கின்ற இழிவுகளைக் கவனிப்பதில்லை. பணத்தொகுப்பு, பதவி உயர்த் தம் முதலியவற்றில் இருக்கும் கருத்து இதிலெல்லாம் இருப்பதில்லை அச்செய்தி இருக்கட்டும்). அந்த சுப்பிரமணியம் என்பவர் எழுதிய நூல் இது. (நூலைக் கையிலெடுத்துக் காட்டி) இதன் விலை முப்பத் தைந்து உருபா. இருப்பது முந்நூற்றைம்பது பக்கந்தான்! விலையோ அளவு கடந்தது. இவரும் இதில் என்ன செய்திருக்கிறார். "திராவிடர் ஒரு கலவை இனத்தார்" என்று எழுதி வைத்திருக்கிறார். மேலும், "சிலர் சொல்லுகிறார்கள், திராவிடர்கள் தென்னாட்டில் தோன்றியவர்கள் என்று; ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மேனாட்டிலிருந்து வந்தவர்கள் போல் தெரிகிறது" என்று எழுதுகிறார்.

இரண்டு பிராமணர்கள், (இஃது ஓர் அரிய வாய்ப்பு. இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு பேறு என்றே நாம் நினைக்கவேண்டும்) பெரிய வரலாற்றாசிரியர்கள்; நம் கருத்துக்குச் சார்பாக, நாம் சொல்லி எழுதினது போலவே எழுதி வைத்திருக்கிறார்கள், அந்த இருவர் யார் என்று சொன்னால் பி.தி. சீனிவாச அய்யங்கார் ஒருவர்; இராமச்சந்திர தீட்சிதர் என்பவர் ஒருவர். பி.தி. சீனிவாச அய்யங்கார் பல நூல்கள் எழுதினார். அதில் History of the Tamils என்பது ஒரு பெரிய நூல். அதிலே நன்றாக - தெளிவாக விளக்கியிருக்கிறார். "தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். அதோடு நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத் தான் இருக்க முடியும்" என்று சொல்லியிருக்கின்றார். ஏனென்றால், நாகரிக மாந்தன் வளர்ச்சிக்கேற்ற அந்த நால்வகை நிலங்கள்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பவை அடுத்தடுத்து இருக்கின்ற நிலம் இந்த உலகத்திலேயே தமிழ் நாடுதான்; வேறு எங்கும் இல்லை. ஒரே பாலை நிலமாக இருக்கும்; இல்லெனில் ஒரே காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருக்கும். இல்லெனில் குறிஞ்சியாக