2. பிறன்மத மறுத்தல்
(விபுலானந்த அடிகள் குரல்
மத்திமம் என்று கூறுவதை மறுப்பது.)
(1) கூற்று:
"ச ரி க ம ப த நி என்னும் ஏழு
சுரங்களுக்கும் பொருந்திய சுருதிகள் 4, 3, 2,
4, 4, 3, 2 ஆகும்.
"குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாங்
குரையா உழைஇளி நான்கு - விரையா
விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்"
என்றமையின், குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழும் இளிக் கிரமத்திலே,
4, 4, 3, 2,
4, 3, 2, என அலகு பெற்று நின்றன. இவைதமையே இளி முதலாக இளி, விளரி, தாரம், குரல்,
துத்தம், கைக்கிளை, உழையென நிறுத்துமிடத்து அலகுகள்
4, 3, 2, 4, 4, 3, 2 என நிரல்
பெறுதல் காண்க.
மறுப்பு: முதலாவது, அலகுகளே இன்னும் இத்தனை யென்று
திட்டமாகவில்லை. அலகு மொத்தம் 24 என்றும்,
22 என்றும் இருவேறு கொள்கைகள்
இருந்துவருகின்றன. இரண்டாவது, பண்ணுக்கேற்றபடி அலகுப் பகுப்பு வேறுபடுவதாகத் தெரிவதால்,
ஒரு பண்ணுக்கு வகுத்த அலகு முறையைப் பொதுமைப்படுத்துவது பொருந்தாது. மூன்றாவது, இசைத்தமிழ்
முதனூல்கள் அழிந்தபின், ஆரிய வழிநூல்களைத் தழுவியும் தமிழிசை நூலும் நூற்பாவும் தோன்றியிருக்கலாமாதலின்,
தமிழிலுள்ள நூலெல்லாம் தனித்தமிழ்க் கொள்கைகளைக் கூறுபவையே யென்று கொள்வதற்கும்
இடனின்று.
(1) கூற்று:
(வடநூல்) |
(தமிழ்நூல்) |
நாரத |
சங்கீத |
பிங்க |
திவாகரமும் |
சிட்சை |
ரத்தினாகரம் |
லந்தை |
சூடாமணியும் |
ச |
- |
மயில் |
மயில் |
குரல் |
ம |
வண்டு |
வண்டு |
ரி |
- |
பசு |
சாதகம் |
துத்தம் |
ப |
கிளி |
கிளி |
க |
- |
ஆடு |
ஆடு |
கைக்கிளை |
த |
குதிரை |
குதிரை |
ம |
- |
கொக்கு |
கிரௌஞ்சம் |
உழை |
நி |
யானை |
யானை |
ப |
- |
குயில் |
குயில் |
இளி |
ச |
குயில் |
தவளை |
த |
- |
குதிரை |
குதிரை |
விளரி |
ரி |
பசு |
பசு |
நி |
- |
யானை |
யானை |
தாரம் |
க |
ஆடு |
ஆடு |
இருஷபம் (விளரி), பசு, காந்தாரம் (தாரம்), ஆடு, தைவதம் (கைக் கிளை), குதிரை, நிஷாதம்
(உழை), யானை என்பன இருமொழி மரபுக்கும் ஒத்துநின்றன.
|