பட்ட ஒரே அவையும் 4 ஆண்டுக்கு ஒரு முறை வயதுவந்த எல்லாமக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் உடைய குடியரசு நிறுவப் பெற்றது. ஆனால் இதனை நடத்தத் தக்க ஆற்றல் வாய்ந்த தலைவனில்லா நிலையில் நெப்போலியன் குடியில் வந்த லூயி நெப்போலியன் கை ஆட்சியைக் கொண்டு இரண்டாம் பேரரசை நிறுவினான். இது 1852-முதல் 1870-வரை நீடித்தது. இக்காலத்தில் அரசியல் வளர்ச்சி ஏற்படாத போதிலும் அமைதி நிலவிற்று. நாட்டின் செல்வமும் செல்வாக்கும் வளர்ச்சியுற்றன. இதன் பிற்பகுதியில் பல போர்கள் நடைபெற்றன. இவற்றால் ஆட்சி சிறிது நலிவுற்றது. இறுதியில் பிரஷ்யாவுடன் (அதாவது செர்மனியுடன்) நடைபெற்ற போரில் ஃபிரான்சு தோற்று அல்ஸாஸ் லொரேயின் முதலிய கைத்தொழில் மாகாணங்களை இழக்க ே்நர்ந்த. இதனுடன் இரண்டாம் பேரரசு வீழ்ச்சியடைந்தது. இதன்பின் மூன்றாவது தடவையும் ஒரு குடியரசு ஏற்பட்டது. முடியாட்சிக் கட்சியினருக்கும் வெறித்த குடியரசுக் கட்சியினரான பொது உடைமைக் கட்சியினருக்கும் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இக் குழப்பநிலையில் கட்சிகளைப் பகைக்காது இணைத்துக் குடியாட்சிக் கட்சியினரான டியர்ஸும் மக்மோகனும் 1875-ல் தற்காலிகமாக ஓர் அரசியலை நிறுவினர். இது உண்மையில் மூன்று வேறுவேறு மனிதர்கள் ஏற்படுத்திய அரசியல் சட்டங்களின் கூட்டவியலேயாகும். ஆயினும் மேற்குறிப்பிட்டபடி எந்த உயர் அரசியலும் நிலைபெறாத அளவு அது அதன் நெகிழ்ச்சியின் பயனாக நிலைபெற்றது. தொண்ணூறாண்டுகளாகப் பல அரசியல் அமைப்புகளையும் கையாண்டு பார்த்த ஃபிரஞ்சு மக்கள் இறுதியில், |