முதலில் இக் கூட்டுறவின் தலைவராயிருந்து பின் பேரரசரான பிரஷ்யா அரசரின் கால் வழியில் வந்தவர்கள் கெய்ஸர் (பேரரசர்) என்ற பட்டம் பெற்றனர். பிரிட்டிஷ் பேரரசர் பிரிட்டனின் அரசராகவும் பிரிட்டிஷ் பேரரசின் பேரரசராகவும் விளங்குவதுபோல் அவர் பிரஷ்யாவின் அரசராகவும் செர்மனியின் பேரரசராகவும் விளங்கினார். முதலுலகப் போருக்கு முன்பே சீர்திருத்தப் பொதுக் குடியாட்சிக் கட்சியினர் (Social Democrats) பேரரசினை எதிர்த்து வந்தனர். 1917-ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் 1918-ல் நிகழ்ந்த ஜெர்மன் பேரரசின் படுதோல்வியும் அவர்களை வலுப்படுத்தின. பேரரசர் பொதுத்தேர்தலுரிமை முதலிய பலவற்றையும் இறுதிநேரத்தில் விட்டுக் கொடுத்தும் பயனின்றிப் பேரரசு கவிழ்ந்தது. அதன் பின் சிலகாலம் வெய்மார் அரசியல் ஆங்கில அரசியல் முறையைப் பின் பற்ற முயன்றது. ஆனால் உலகப் போரால் ஏற்பட்ட நெருக்கடியை அது சமாளிக்க முடியாமல் போகவே படிப்படியாக நாசியர் ஆட்சிமுறை ஏற்பட்டது. இது பெயரளவில் குடியரசாயினும் உண்மையில் பழைய பேரரசின் புது உருவேயாகும். கெய்ஸரிடத்தில் இப்போது பொருள் காப்பாளராய் அமைந்த ஹிட்லர் நின்றார். இவ்விடம் பிஸ்மார்க்கால் தனக்கென ஏற்படுத்தப்பட்டது. அது கெய்ஸர் கையாளின் கையிலிருந்தவரை அவரே வல்லாளராய் ஆட்சி செலுத்தினார். கெய்சரில்லாதபோது பொருள் காப்பாளரே அவ்விருதிறத்து உரிமைகளையும் பெற்றுப் புதிய வல்லாளரண்டாராயினார். 1945-ல் இண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வீழ்ச்சியடைந்த பின் செர்மனி நேச நாடுகளிடையே பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ரஷ்யச் சார்பில் பொது உடைமை முறை ஆட் |