பக்கம் எண் :

குடியாட்சி137

சிக்கும் மற்றப் பகுதிகள் பிரிட்டன், அமெரிக்கா, ஃபிரான்சு ஆகியவற்றின் தலைமையில் குடியாட்சி முறைக்கும் உட்பட்டிருக்கிறது.

   இங்ஙனமாக ஒரு வகையில் இங்கிலாந்து மக்களின் பழம் பெரும் தாயகமான செர்மனி ஐரோப்பாவில் வணங்காமுடி பெற்றுப் பெரும் படையுடன் பேரரசாட்சி நிறுவ இரண்டாயிரம் ஆண்டு முயன்றும் இன்றும் உருவான அரசியல் அமைக்க முடியாமல் திணறும் நிலையிலேயே உள்ளது.

   இன்னும் ஒருபுறம் ஐரோப்பா முழுமைக்குமே நாகரிகமாகிய பாலூட்டிய தாயகம் இத்தாலி 5-ம் நூற்றாண்டில் ரோமர் பேரரசாட்சி சீர் குலைந்தபின் அரசியல் குழப்பத்துட்பட்டுப் பல தடவை பிற நாடுகளின் அரசியலடிமையாய் வாழ்ந்து இறுதியில் நெப்போலியனால் வெல்லப்பட்டு அவன் கீழ் ஒரே நாடாக மீட்டும் ஒற்றுமைப் படுத்தப்பட்டது. நெப்போலியன் ஆட்சியில் அவர் சட்டம் ஒழுங்கு முதிலிய யாவும் இத்தாலி வாழ்வில் பொறிக்கப்பட்டன. அதன் பயனாக இன்றளவும் அது ஃபிரான்சுடன் பல ஒற்றுமைகள் உடையதாய் விளங்குகிறது.

   நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற வியன்னாக் காங்கிரஸில் பிஸ்மார்க் இத்தாலியை மீட்டும் துண்டுபடுத்திப் பெரும் பகுதியை ஆஸ்ட்ரியாவுக்கும் மற்றப் பேரரசுகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். ரோம் கத்தோலிக்க சமயத்தின் உலகத் தலைவரான திருப்பெருந் தந்தை (Pope) யிடம் தரப்பட்டது. இத்தாலி மக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிளர்ந்தெழுந்தும் சிற்றரசுகளுள் ஒன்றிலேனும் பொறுப்பாட்சி இல்லாத நிலையில் ஒற்றுமை ஏற்பட வழியில்லாதிருந்தது. 1848-ல் இத்தாலியில்