1935-ல் குடியாட்சியின் தன்மையும் பொறுப்பாட்சியின் தன்மையும் மாகாண அரசியலிலேனும் இடம்பெறும் முறையில் அடுத்த பெரும்படியான முன்னேற்றம் தரப்பட்டது. இது அவ்வாண்டு ஆகஸ்டு 8ல் பிரிட்டிஷ் அரசியல் மன்றில் நிறைவேறி மன்னர்பிரான் இணக்கம் பெற்றது. இது மாகாணங்களில் மட்டுமே பொறுப்பாட்சியைப் பேரளவில் தந்ததோடு மேலரசியலையும் சீர்திருத்துவதற்கான முதற்படிகளை உட்கொண்டதாயிருந்தது. இந்தியப் பெருநிலைப் பரப்பின் விரிவுக்கும் பல்வகைப் பெருக்கத்திற்கும் அரசியல் முறையில் ஏற்பட்ட செயற்கைப் பிரிவுகட்கும் ஏற்றவகையில் இந்திய அரசியலை அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகளின் அரசியலைப் போலவே கூட்டுறவு அரசியலாகக் கொள்வதென இச்சட்டம் ஒத்துக்கொண்டது. இக்கூட்டுறவில் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் உடனடியாகச் சேர்வதென்றும் துணைமன்னர் நாடுகள் தம் விருப்பப்படி அவ்வப்போது சேர்வதென்றும் ஏற்பாடு செய்யப்பட்டத. சட்டத்தின் கருத்த முற்றிலும் நிறைவேற்றப்பட்டால் பழைய நடைமுறைக் குழுவிற்கு மாறாக இச்சட்டத்தின்படி 10க்கு மேற்படாத அமைச்சர்கள் முதல்தலைவரால் அமர்த்தப்படுவர். கட்சிகள் பலவற்றின் கட்டுப் பிணக்குகளிடையே இக்கூறு முற்றிலும் நிறைவேறவில்லை. பழைய நடைமுறைக் குழுவே தொடர்ந்து நின்று தொகையில் விரிவுபெற்று வந்திருக்கிறது. சட்டத்தின்படி அரசியல் மேலவையில் (Council of State) பிரிட்டிஷ் இந்தியாவில் குறுகலான ஒரு தேர்தல் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 156 உறுப்பினர்களும் துணைமன்னர் காடுகளிலிருந்து அமர்வுபெற்ற 104 உருப்பினரும் இருப் |