பக்கம் எண் :

106தமிழகம்

டற்கும் முன்னர்த் தோன்றினமைபற்றி முதற்கண் வைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டும் இயற்றமிழின்றி இயங்கும் வன்மையுடையனவல்ல.
     "இயற்றமிழினுள்ளே எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணிகளும், இசைத்தமிழினுள்ளே ஏழு சுரங்களும் அவற்றிற் பிறக்கும் பண்களின் வகையும் பிறவும், நாடகத் தமிழினுள்ளே கூத்து விகற்பமும் அபிநய விகற்பமும் கூத்தியரிலக்கணமும் அரங்கிலக்கணமும் பிறவும் விளக்கப்பட்டனவாம்.

 --பாலாமிருதம்--சிவப்பிரகாச பண்டிதர்.

     "வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி யெழுந்த இலக்கணம் இயற்றமிழெனப்படும். அச் செய்யுளின் இன்றியமையாத இசை இசையிலக்கணமெனப் பெயரெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப்பட்ட தெனப்படும்; இவ்விரண்டன்வழி நிகழ்த்துங் கூத்திலக்கணமாகிய நாடகத் தமிழ் அவற்றுட் பின்னர்த்தாமென முறைமை கூறுதலும்."

 -பேராசிரியர் உரை.

10. இசைத்தமிழ்

     "இயற்றமிழ் பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் இசைத்தமிழாம்." ஒருகால் தமிழகத்து இசைக்கல்வி மிக உயர்நிலை அடைந்திருந்ததென்பதைப் பழைய நூல்கள் உணர்த்துகின்றன. அகத்தியர் இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்த வரலாறும் இதற்குச் சான்றாகும். இராவணனின் இசைக்கு உவந்து இறைவன் நீண்ட ஆயுளும் வாளும் அளித்தான்.
     "இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருவும் பிறவும் தேவவிருடி1 நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாயுள்ள தொன்னூல்கள் இருந்தன. நாடகத்

      1. நாரத கீதக் கேள்வி நுனித்து (பெருங்கதை)