ஆங்கிலம் | இலத்தீன் |
நேசிக்கிறான் (He) loves நேசிக்கிறாள் (She) loves நேசிக்கிறது (It) loves | (llle) amat (llla) amat (lllud) amat |
3. சொற்றொடரழகு |
ழுசொற்றொடர்-வாக்கியம். அது எழுவாய் பயனிலை, செயப்படுபொருள் என்பன கூடி ஒரு கருத்தை விளக்குவது. அவற்றோடு அவற்றின் உரிச்சொற்களும், இடைப்பிற வரலாய் வரும் வாக்கியங்களும் சேர்ந்து குழுச் சொற்றொடராயும் வரும். பெயர் வினைகளின் இயலை உரிச்சொற்களானும், பல பெயர்களை இடைச்சொற்களானும், பலவினைகளை எச்சத்தானும், பெயர்க்கும் வினைக்குமுள்ள சம்பந்தத்தை வேற்றுமை யுருபானும் புணர்த்தித் தமிழில் விளக்கப்படுகின்றது. ஆங்கிலத்திலும், தமிழ் போலவே சொற்றொடருளது. |
ழுவடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலிய பாஷைகளில் அங்ஙனம் அழகுபெறாது விசேடணங்களுக்கும் அவை தழுவும் பெயர்களின் வேற்றுமை பால்களை யேற்றல், இடைச்சொல் இன்றிக்கூறல் முதலிய அழகின்மையுள்ளது. |
உதாரணம் |
(1) ழுகரிய பெரிய குயிலை வஞ்சகமுடைய காக்கையாக எண்ணினான் க்ருஷ்ணம் ப்ரஹந்தம் வஞ்சகி நம் காகம் பேனோ கரியதை பெரியதை குயிலை வஞ்சகமுடையதை காக்கையை எண்ணினான். |
(2) மதுரையிலிருக்கும் இராமன் மகன் புலவனாகிய சுமுகனாக இலக்குமணனால் இது எழுதப்பட்டது.மதுராவாசிநா ராம புத்திரேண பண்டிதேந சுமுகேந லக்ஷ்மணேந இயம் லிக்யதே. |